க.செபாஷ்டின், வேலூர் எட்டி உதைக்கும் பாஜகவின் பாதங்களை தட்டிவிடத் தைரியமின்றி தவிக்கிறதே அதிமுக தலைமை? களவாணிகளை எப்படி நடத்துவது என்பது காவல்துறைக்கு கைவந்த கலை! கையூட்டுக் பெற்றாலும், காவல்துறை அதன் புத்தியை காட்டும் என்பதால், களவாணிகளுக்கும் தெரியும் தங்கள் நிலை! வேறொன்றும் சொல்வதற்கில்லை. அ.அறிவழகன், மயிலாடுதுறை உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்துகிறதே திமுக? உள்ளூர் கட்சிக் கட்டமைப்பில் பலவீனமாக உளுத்துப் போய் கிடக்கும் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் கூட தனித்து களம் காண முடியாத நிலையில்…, ‘உதாசீனப்படுத்தப்பட்டாலும் கூட ஓடிப் போய்விடமாட்டார்கள்’ என்பது ...

கள்ளக் காதல் செய்து அடுத்தவர் குடியைக் கெடுத்த பெண்மணியான அன்னபூரணி சாமியாருக்கும், இந்து ராஜ்ஜியத்தின் பெயரால் ரத்தபலி கேட்கும் சாமியார்களுக்கும் பக்தர்கள் கிடைப்பது எப்படி? இது போன்ற சாமியார்களுக்கும், இன்றைய அரசியல் சூழலுக்குமான தொடர்புகள் என்ன..? மக்களில் பெரும்பாலோரின் வாழ்க்கை துன்பகரமானதாகவே உள்ளது! அந்த துன்பத்தை எப்படி எதிர்கொள்வது என்ற பயிற்சியும், பக்குவமும் அடையாதவர்கள் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்த்து ஏங்கிய வண்ணம் வாழ்கிறார்கள். அந்த துன்பத்திற்கான ஆறுதல் அல்லது தீர்வு எங்கோவோ, யாரிடமோ தமக்கு கிடைக்கும் என்ற அவர்களின் தேடுதலில் கண்டடையப் படுபவர்களே ...

அதிமுக கூட்டணிக்குள் நுழைய முடியாத – கைவிடப்பட்ட இரு கட்சிகள் – கை கோர்த்துள்ளன! இருவருக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே அதிமுகவால் பாதிக்கப்பட்டவர்கள். அந்த வகையில் அதிமுகவை எதிரியாக கருதுபவர்கள்! எனவே, எதிரிக்கு எதிரி நண்பன் என கை கோர்த்துள்ளனர்! மற்றபடி இரு தரப்புக்கும் இடையே இணக்கமோ, புரிதலோ, நட்போ முன் எப்போதும் இருந்ததில்லை. இந்த வகையில் தன் நட்பு சக்தி யார்? எதிரி யார் என்ற தெளிவில்லாத கட்சியாகவே இன்னும் தேமுதிக உழன்று கொண்டுள்ளது என்பது நிருபணமாகிறது. இரு கட்சித் தலைவர்களும் ஒருவரை ...

தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் உள்ள ஒரு கட்சிக்குத் தான் எத்தனை தெனாவட்டு..? ஒன்னும் இல்லாமலே எப்படி கெத்துகாட்டுவது என்பதற்கு இன்று தேமுதிகவை மிஞ்ச நாட்டில் வேறு கட்சி இல்லை! காலி பெருங்காய டப்பா எப்படியும் கொஞ்ச நாளைக்கு வாசனை வீசிக்கிட்டுத் தான் இருக்கும்! ஆனால், சமையலுக்கு பயன்படாது! அது போலத்தான் தேமுதிக! இது ஒரு வேத்துவேட்டு! வெடிக்கிறது மாதிரி சின்ன தீப்பொறி வந்துட்டு தானா அணைந்துவிடும்..! ”234 தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். எங்க தயவில்லாமல் யாராலும் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க ...