நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டு நாட்களாக உச்சகட்ட கொந்தளிப்பில் தகித்தன! அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த சினத்தால் அவைகள் முடங்கியதில் ஆளும்கட்சியினர் திகைத்தனர்! 1970 — களில் உலகையே உலுக்கிய அமெர்க்க அதிபர் நிக்சனின் “வாட்டர்கேட் ஊழலுக்கு, தற்போதைய “மோடிகேட் ஊழல்” சற்றும் சளைத்து அல்ல என சரித்திரம் தனது துயரை அழுத்தமாக உரைக்கிறது ! ஆளும் பொறுப்பில் இருப்போர்  எதிர்கட்சித் தலைவர்களையும்,பிற பிரமுகர்களையும்  முறையற்ற முறையில்  வேவு பார்ப்பதென்பது  “அநாகரிகமான குற்றம்” என நாகரிகமான சமூகம் கருதுகிறது ! அடுத்தவர் குளியலறையில் எட்டிப்பார்ப்பது ...