பழங்குடி மக்கள் அதிகார மையத்தால் அனுபவிக்கும் சொல்லப்படாத வலிகளை சொல்லும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் ஒரு புறம் மக்களின் பேராதரவை பெற்றுள்ள நிலையில், மற்றொரு புறம் மதவாத, சாதிய அரசியல் செய்து வருபவர்களின் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த விமர்சனங்களுக்கான பதில்கள் படத்திற்குள்ளேயே இருக்கிறது என்ற வகையில் அமைதியாக கடந்து சென்றார் சூர்யா! ஆனால், அன்புமணி ராமதாஸ் மிக சூடாகி சூர்யாவிற்கு சில கேள்விகளை பொதுவெளியில் எழுப்பி ‘கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்’ என்றார். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் ...

‘தடுப்பூசி உற்பத்தியை தடை செய்து சுகாதாரத் துறையை சூறையாடிய அன்புமணி’ என்ற கட்டுரையை நமது அறம் இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தோம்! அதற்கு விரிவான ஒரு மறுப்பு கட்டுரையை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் திரு.அன்புமணி நமக்கு அனுப்பினார். அந்த மறுப்பு பிரசுரமாகியுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி தன்னிறைவை அழிக்கவில்லை,அடித்தளமிட்டேன் தடுப்பூசி விவகாரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இன்று ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன! அவர்கள் வைத்ததே விலை! 138 கோடி மக்களின் உயிர் அவர்கள் தயவில் என்றாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களை அன்புமணி ...

பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணையதளத்தில் தடுப்பூசி குறித்து பரத்பூஷன் என்பவர் கடந்த 17-ஆம் தேதி  எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்து அறம் இணையதளத்தில்  கடந்த மே 23-ஆம் தேதி  வெளியிடப்பட்ட கட்டுரைக்கான  என்னுடைய ( அன்புமணி ராமதாஸ்) பதில் கட்டுரை; தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் தன்னிறைவை நிலையை நான் தான் அழித்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தடுப்பூசி உற்பத்தி மற்றும் கொள்முதலை அரசிடமிருந்து தனியாரின் கைகளுக்கு மாற்றி விட்டதாகவும் அந்த கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; அபத்தமானவை; அந்தக் குற்றச்சாட்டுகளில் ஒரு துளி கூட ...

138 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியா,  கொரோனாவை சமாளிக்க தனியார் நிறுவனங்களின் தயவை எதிர்பார்த்து காத்து, விழி பிதுங்கி  நிற்கிறது. இந்தியாவில் அரசின் பொதுத் துறை தடுப்பூசி தன்னிறைவு குலைந்தழிந்து போனதற்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்  அன்புமணியே காரணம்! – ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்துகிறது! ‘’தடுப்பூசி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாகத் திகழ்ந்த நமது இந்தியா இன்று இரண்டு தனியார் நிறுவனத்தின் தயவை நம்பி இருப்பது ஏன்?’’ என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுகிறது! மே 8 ஆம் தேதி ஒரு ...

ஜெயிக்கிற கட்சியாகப் பார்த்து தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்து வந்த ராமதாசால் இந்த முறை திமுக கூட்டணிக்குள் நுழைய முடியவில்லை! பாமகவை உறுதியாக சேர்க்கமாட்டோம் என திமுக திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டது! பேச்சுவார்த்தைக்கு கூட தயாராக இல்லை என பாமகவிற்கு உணர்த்தப்பட்டுவிட்டது! இது எந்த தேர்தல் காலத்திலும் பாமக பார்த்திராத அதிர்ச்சியாகும்! ராமதாஸ் நம் கூட்டணிக்கு வருவதால் பலன் கிடையாது என்பது மட்டுமல்ல, பாதகங்களும் அதிகம் என திமுக கணித்துள்ளதாம்! கடந்த பத்தாண்டுகளாக பாமக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணி தோற்பது என்பது எழுதப்படாத ...