அர்னாபின் வாட்ஸ் அப் உரையாடல் தொடர்பாக வெளியான செய்திகள் எதுவுமே புதிதல்ல! ஆனால், அரசியல் தரகராக அல்ல, ஆட்சியின் ஒர் அங்கமாகவே – பல சதி திட்டங்களின் பங்குதாராக – அர்னாப் இருந்துள்ளார் என்ற புரிதலையே பார்தோ தாஸ் குப்தாவுடனான அர்னாப் வாட்ஸ் அப் உரையாடல்கள் நிருபிக்கின்றன…! தேசபக்தியின் பெயரால் எந்த பஞ்சமா பாதங்களையும் செய்யக் கூடிய லைசென்ஸை பாஜக அரசு அர்னாப் கோஸ்வாமிக்கு தந்துள்ளது என்பதை என்னைப் போல ஊடகத்தில் இருக்கும் ஒரு சிலர் ஓயாமல் கூறி வந்ததற்கு சற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன ...

பத்திரிகையாளர் போர்வையில் பஞ்சமா பாதகங்களை மனித நேயமின்றி அரங்கேற்றிய ரிபப்ளிக் சேனல் முதலாளி அர்னாப் கோஸ்வாமி கைதாகியுள்ளார். ஒன்றா, இரண்டா..? ஒவ்வொரு நாளும் ஒரு புரளி, ஒவ்வொரு விவகாரத்தையும் திசைதிருப்பும் குயுக்தி…என அவர் செய்த அநீதிகளை பட்டியலிட்டால், பல அத்தியாயங்கள் எழுதலாம்! பத்திரிகையாளர் பணி என்பது உரிமை மறுக்கப்படும் எளிய மக்களுக்கான நீதியின் குரலாக ஒலிப்பதாகும்! ஆனால், அர்னாபோ அதை அநீதியை செய்பவர்களை நியாயவான்களாக்கும் பணியாக மாற்றிக் கொண்டவர். ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் ஒரு அரசியல்பார்வை இருக்கலாம் தவறில்லை. ஆனால், மாற்று அரசியல் கருத்துள்ளவர்களையும்,மதித்து விவாதித்து ...