பீகார் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றிக் கோட்டைத் தொட்டது எப்படி என்று பார்த்தால், பாஜகவின் அரசியல் தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகத் தான் பார்க்கிறேன். தேர்தலுக்கு முந்திய கள ஆய்வில் எல்லோருக்கும் தெரிய வந்தது என்னவென்றால், ’மகாபந்தன்’ எனப்படும் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்பதே! லாலுவுவின் மகன் தேஜஸ்வி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.அவரும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்றது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மூன்றுமுறை ஆட்சி கட்டிலில் இருந்துவிட்ட நிதீஸ்குமார் ...

இன்றைய அரசியல்வாதிகளிலேயே மரியாதைக்குரிய அரசியல் பாரம்பரியமும், நீண்ட நெடிய நிர்வாகத் திறமையும், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பெருமளவு விலகி நிற்பவருமாக ஒருவரை சொல்ல முடியுமென்றால், அவர் நிதீஸ்குமார் தான்! இன்னும் சொல்வதென்றால், மாநில அரசியலைக் கடந்து தேசிய அளவில் பிரதமர் வேட்பாளருக்கான தகுதி கொண்டவராகவும் பார்க்கப்பட்டவர்! குற்றச் செயல்களின் கூடாரமாக பார்க்கப்பட்ட லாலுபிரசாத்தின் 15 வருட ஆட்சிகால பீகாரை, குற்றச் செயல்களை குறைத்து,கல்வியறிவு பெற்ற,தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலமாக வளர்த்தெடுத்ததில் நீதீஸின் பங்கு மகத்தானது! இதனால் தான் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மூன்று முறை ...