அதிகாலை 4 மணிக்கு வீட்டுத்  தோட்டத்தில் உள்ள மரத்தில் இருந்து ஒரு பறவையின் குரல் கேட்கிறதா?.. நிறைய முறை அப்படி கேட்டு உள்ளேன். உங்களில் பலரும் கேட்டு இருக்கலாம். ஏன் விடிவதற்கு முன்பே அந்த பறவை குரல் கொடுக்கிறது?…  பொதுவாக பறவைகள் விடியல் தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்பே இருப்பிடத்தில் இருந்து வெளியே கிளம்பு தயாராக இருக்கும். வெளிச்சம் தென்பட்டதும் பறப்பதற்கும், இரை தேடுவதற்கும், ஓயாமல் குரல் கொடுப்பதற்கும் என்று பறவைகளின் முழு செயல்படுகள் விடிந்தே தொடங்கும். ஆனால் அதற்கு முன்பே அதிகாலை 4 ...