தேசமே தீப்பிடித்து எரிகிறது! அக்னிபாத் என்பது இந்திய இளைஞர்களை இன்று அக்னி பிழம்பாக மாற்றியுள்ளது! பாஜக ஆட்சி இராணுவத்திற்கு கன்னாபின்னா என்று அதிக நிதியை ஒதுக்கி, ”ஆயுதங்களுக்கு அதிக நிதியை செலவழிப்போம். ஆனால், அர்ப்பணிப்போடு ராணுவத்திற்கு வரும் வீர்களை அத்துக் கூலிகளாக நடத்துவோம்” என்கிறார்கள்! பீகாரில் தொடங்கி உ.பி.ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் , இமாச்சசல் பிரதேசம் ,தெலுங்கானா என அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் குதித்துள்ளனர். ஏராளமான ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது, வன்முறையும், போலீஸ் தடியடியும் தொடர்கிறது. காரணம், ...

ஒரே நாடு, ஒரே மதம் என்ற கோட்பாட்டில் பாஜக அரசு தற்போது ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு என்ற கருத்தியலில் தேசம் முழுமைக்குமான CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வை கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் இனி 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேல்படிப்பை தொடர CUET எழுதியே ஆக வேண்டும்! அதாவது நீட்டைப் போல இது ஒரு கியூட்! இதுவும் என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். நீட்டை எதிர்ப்பதைவிட நூறு மடங்கு அதிகமாக எதிர்க்க ...

‘இந்த இ.எஸ்.ஐ எல்லாம்இனி தேவையில்லை. தொழிலாளர்கள் எல்லாம் தனியார் மருத்துவமனைக்கு போகட்டும்’ என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தும் வழக்கறிஞர் ஆர். நடராஜன் நேர்காணல். தமிழகத்தில் மட்டுமே 18,000 க்கு அதிகமான தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐயில் இணைந்து பலன் பெற்று வருகின்றனர். இந்தியா முழுமையிலும் லட்சத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ மருத்துவப் பலன்களை பெற்று வருகின்றனர். ”பாஜக அரசு கொண்டு வந்துள்ள Code on Social Security, ...

இப்படி எல்லாம் கூட நடக்க முடியுமா? நம்பவே முடியவில்லை. தேச ஒருமைபாட்டுக்கு எதிராக சிக்கலை, தேவையில்லாத பிரச்சினைகளை ஒரு அரசே வலிந்து உருவாக்கலாமா? குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் சார்பிலும் தலா இரு ஊர்திகளோ அல்லது ஒன்றோ அணிவகுத்து வந்தால் தில்லி சாலைகள் திணறிவிடுமா? இந்தியாவில் இருப்பதே 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள் தானே! மொத்தம் 225 ஊர்திகள் இடம் பெறும் அணி வகுப்பில் 16 மாநிலங்களுக்கு மட்டும் வாய்ப்பு என்பது சிறுபிள்ளைத் தனமில்லையா? நாம் எல்லோரும் இந்தியர்கள் என்பதை உணர்வுபூர்வமாக ...

தினசரி துப்பாக்கி சூடு, சுட்டுக் கொலை, போலீஸ் என்கவுண்டர் என்பதாக கடந்த 27 நாட்களில் காஷ்மீரில் 26 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளில் இறப்பது பெரும்பாலும் பதின்பருவத்து இளைஞர்களே என்பது வேதனை…! இது போன்ற செய்திகள் நம்மை காயப்படுத்துகிறது அல்லவா? இந்த மனித இழப்புகள் ஏன் இந்த நாட்டில் தொடர்கின்றன? அதுவும் காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளாக இவை தொடர்வது ஏன்? பிரச்சினையை தீர்த்தேவிட்டோம் ;இனி தீவிரவாதமும் , வன்முறையும் தலைதூக்காது என்று அமீத் ஷா ஆகஸ்ட் 5,2019ல் அறிவித்த பின்னரும் தொடர்வது மட்டுமல்ல, ...

இது வரையிலான தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு சில குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களாவது இருந்தன. ஆனால், தற்போதைய பாஜக அரசோ, புதிய பணிச்சூழல் சட்டத் தொகுப்பின் வழியாக தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கி கொள்ளலாம் என சூசகமாகச் சொல்கிறது! எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கலாம்…இப்படியாக எண்ணற்ற சுதந்திரங்களை முதலாளிகளுக்கு அள்ளி வழங்குகிறது மோடி அரசு! இது வரை தொழிலாளர்களுக்கு ஒரளவேனும் பாதுகாப்பளித்த  44 சட்டங்களைச் சுருக்கி, 4 தொழிலாளர் சட்டத் ...

எங்கெல்லாம் மதச் சிறுபான்மையினர் உள்ளனரோ.., அங்கெல்லாம் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்! வங்காளதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் துர்கா பூஜை கொண்டாடும் போது முஸ்லீம்களால் தாக்கப்பட்டனர்! அதில் ஆறுபேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த சம்பவம் மூன்றுபுறமும் வங்காளதேசத்தால் சூழப்பட்ட திரிபுராவில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது! வங்கதேசக் கலவரம் நடந்தது அக்டோபர் 15 தில்! அதைத் தொடர்ந்து திரிபுராவில் அக்டோபர் 22 தொடங்கி 27 வரை தொடர்ந்து கலவரம் நடந்துள்ளது. முஸ்லீம்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்! திரிபுராவில் நீண்ட நெடுங்காலம் மாணிக்சர்கார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி ...

இப்படி எல்லாம் கூட நடக்குமா..? என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாவின் மாபெரும் நிறுவனமான ஏர் இந்தியா விற்பனை நடந்துள்ளது. நஷ்டத்திற்கே வழியில்லாத லாபகரமான விமான சேவைத் தொழிலை அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமாக கூட்டுச் சேர்ந்து சீரழித்தது போதாது என்று இன்று கிட்டத்தட்ட அடிமாட்டு விலைக்கு டாடாவிற்கு தந்துவிட்டனர்! கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி இந்த விற்பனை குறித்து கொந்தளித்துள்ளார் “நாட்டின் தேசிய சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் சூறையாடி வருகிறது. டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது, டாடாவுக்கு மோடி ...

ஓட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்துவிட்டது! உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை உலுக்கி எடுத்துள்ளது! ஆனால், இன்று வரை இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயலைக் கண்டிக்கவோ, வருத்தப்படவோ பிரதமர் மோடியும்,,உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்வரவில்லை! எனில், நடந்த சம்பவங்களுக்கு இவர்களின் ஒப்புதல் இருந்தது என்று நாம் புரிந்து கொள்ளலாமா? உலகில் நடக்கும் பல சம்பவங்களுக்கு டிவிட் போடுபவர் மோடி! தமிழ்நாட்டில் திண்டுக்கல் லியோனி பேசிய ஒரு பேச்சுக்கு டெல்லியில் இருந்து வந்து கண்டனம் தெரிவித்தவர். இந்தப் படுகொலைகளை ...

எல்லா வகையிலும் தனியார் நிறுவனங்கள் நாட்டை கொள்ளைடித்துச் சுரண்ட கதவு திறக்க வேண்டும் என்ற பாஜக அரசு திட்டத்தின் ஒரு அங்கம் தான் பயிர்காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதாகும்! இந்த லட்சணத்தில் ‘இதற்கு பிரதம மந்திரி காப்பீடுதிட்டம்’ என்ற பெயர் வேறு! சுதந்திர இந்தியாவில் இத்தனை ஆண்டுகளில் பயிர் காப்பீடு என்ற ஒன்று தேவைப்படாமல் தான் எவ்வளவோ சாதனைகள் நடந்துள்ளன! முதலாவதாக இந்த திட்டமே அவசியம் இல்லாதது. அப்படியே அவசியம் என்று கருதினால் லாப நோக்கமில்லாத வகையில் அந்தந்த மாநில அரசே இதை ...