உள்ளாட்சி நிர்வாகத்திலும், நீதி விசாரணையிலும் சோழர்கள் முன்னோடியாக விளங்கினர். கிராம  பொருளாதார மேம்பாட்டிற்காக நிலமில்லா விவசாயிகளுக்கான “சாவா மூவா  பேராடு” திட்டத்தை நடைமுறைப் படுத்தினான் இராஜராஜ சோழன். இந்த திட்டம் சுவாராசியமானது பேரரசன் இராஜ ராஜனின் வியத்தகு வரலாற்று உண்மைகளை உள்ளடக்கிய ” பொன் மான் பயந்த புலி” என்ற நூலை முனைவர் பா. இறையரசன், வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இந்த நூலுக்கு முனைவர் பொற்கோவும், முனைவர் மு.ராஜேந்திரனும்  அணிந்துரை தந்துள்ளனர். இந்த நூல் வெளியீட்டு விழா ஜனவரி 16 ...

இரா.முருகவேள் எழுதியுள்ள வரலாற்று நாவல் ‘புனைபாவை’. கொங்கு மண்டலத்தின் 13 ம் நூற்றாண்டு காலக்  கதையை; கடைசி தமிழ் மன்னன், தமிழ்நாட்டை ஆண்ட போது வாழ்ந்த  மக்களின் வாழ்வியலை ரத்தமும்,சதையுமாக உயிர்ப்போடு பேசுகிறது. புத்தகக் கண்காட்சியில் கவனம் பெற்ற நாவல் இது. விடுதலைக்குப் பிறகான,  கொங்கு மண்டலத்தின் அறுபது ஆண்டு கால வாழ்வியலை  ‘முகிலினி’ நாவலில் வெற்றிகரமாக கொண்டுவந்தவர் இரா.முருகவேள். அவர் அதே கொங்கு மண்டலத்தின் மூலம்,  தமிழக வரலாற்றை புனைவதில் வியப்பில்லை. இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும், கொங்கு மண்டலத்தில் ...