கேள்வி கேட்டு அறிவை விசாலப்படுத்துவது தான் கற்றலின் அடிப்படை இலக்கணம். ஆனால், ஆசிரியர்களையே கேள்வி கேட்கவோ, விபரம் தெரிந்து கொள்ளவோ வழியற்ற புள்ளி விபரப் புலிகளாக்கி வருகிறது கல்வித்துறை. அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகள் நிறைவேற்றத்திற்கும் ஆசிரியர்களே பலியாடுகள்! இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களை அரசாங்கம் அறிவிக்கப்படாத ஒரு கொத்தடிமையாக கருதுகிறதோ என்ற சந்தேகம் கூட அவ்வப்போது வரத் தான் செய்கிறது. பேரு தான் வாத்தியார்! ஆனா, வருஷம் முழுக்க எங்களுக்கு வழங்கப்படும் பணிகளைக் கேட்டால் மலைச்சு போயிடுவீங்க! சட்டமன்ற தேர்தலா? பாராளுமன்ற தேர்தலா? ...