ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அராஜகம், கொலை வழக்கு உள்ளிட்ட எதிலும் திமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஒரு சீட்டிங் வழக்கிலே கைது செய்யப் போனார்களாம், தப்பித்துவிட்டாராம்! என்ன நடக்கிறது இந்த ஆட்சியில்? கமிஷன் , கலெக்‌ஷன், கரப்ஷன் ஆகிய  மூன்றையும் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஊழல்களைப் பற்றி சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையே துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது. ஏழை, எளிய பால்விவசாயிகளையும், அடிநிலைத் தொழிலாளிகளையும் சுரண்டித்தான் பல நூறு கோடி சொத்து ...

”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினரின் ஊழல்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்போம்” என மேடைக்கு மேடை ஸ்டாலின் பேசினார்! உச்சபட்ச ஊழல்களில் திளைத்த அதிமுக ஆட்சி மீது விரக்தியில் இருந்த தமிழக மக்கள் ‘கண்டிப்பாக இந்த ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்’ என திமுக கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெற வைத்தனர்! ஸ்டாலின் கூறிய வாக்குறுதிகளை நம்பி சமூக ஆர்வலர்களும், அந்தந்தத்துறை சம்பந்தப்பட்ட நேர்மையாளர்களும், அந்தந்த ஏரியாவில் வாழும் மக்கள் சிலரும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகுந்த ஆதாரங்களைத் திரட்டி புகார்கள் தந்தனர்! ...

க.அமுதன், சுசீந்திரம், கன்னியாகுமரி ”அதிமுக அரசின் ஊழல்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே.? இதற்கெல்லாம் புளகாங்கிதப்படும் மனநிலையை மக்கள் கடந்துவிட்டனர். சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் எப்போது இடிந்துவிழுமோ என்ற நிலையில் சென்ற ஆட்சியாளர்களால் கட்டப்பட்டு உள்ளது. தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்துவிழுந்ததை யாவரும்பார்த்தோம். அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றார்கள். என்ன ஆச்சு? அவர்கள் தந்த விசாரணை அறிக்கையே வெளியிடபடாமல் ...

2015 தின் சோக காட்சிகள் இந்த ஆண்டும் அரங்கேறுவதற்கான சாத்தியகூறுகள் இருந்த போதிலும், ஆட்சி மாற்றத்தினால் கொஞ்சம் தப்பித்தோம் என்று தான் சொல்ல வேண்டும்! பல ஆயிரம் கோடிகள் மழை நீர் வடிகால் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டுள்ளன. அவை போதுமான பலன்களை தராமல் வீடுகளுக்குள் வெள்ளம் போனதன் காரணம் என்ன..? இன்றைய ஆட்சியாளர்கள் பேரழிவுகளை தவிர்க்க ஆனமட்டும் முயற்சிக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. முதல்வரும், அதிகாரிகளும் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். இப்போதே நிலைமை இப்படி உள்ளது. இன்னும் நான்கைந்து நாட்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் ...

தமிழகத்தில் பள்ளிகளில் சத்துணவு மையங்களுக்கு தினசரி 80 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வரும் திங்களன்று (செப்டம்பர் 13) நடக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்த முறை ஒரே நபருக்கு அந்த ஆர்டரைத் தராமல் பரவலாக பகிர்ந்து தரலாம் என தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது! தமிழகத்தில் குறிப்பாக நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோழிப் பண்ணைகள் உள்ளன. அவர்கள் இந்த டெண்டரில் நேரடியாக பங்கு பெற முனைப்பு காட்டி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு ‘லாபி’ செய்வதாகத் தெரிய ...

அ.தி.மு.க ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறையில் எடப்பாடி பழனிசாமி சொல்படி செயல்பட்ட   ஊழல் தலைமைப் பொறியாளர்களைப்  பற்றி  அறம் ஆன்லைனில் எழுதியிருந்தோம். அதனைத் தொடர்ந்து  ஊழல் பெருச்சாளிகளான தலைமைப் பொறியாளர்கள் கீதா, சாந்தி, விஜயா, சென்னையில் பாலப் பணிகளை விரைந்து முடிக்க முனைப்பு காட்டாத சுமதி ஆகியோரை  இந்த அரசு பணியிட மாறுதல் செய்தது பாராட்டக்கூடியதாக இருந்தது! ஊழலற்ற ஆட்சியைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.  ஆனால் இந்தத் துறையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் அந்த  நம்பிக்கையை சிதைத்துவிட்டது. ஊழலின் நாற்றம் வெளியேறி விடாமல் பார்க்கும் ...

அலங்கோலமாகமாக்கப்பட்ட அரசு கேபிள் நிறுவனம் இன்னும் அதிமுகவின் கட்டுப்பாட்டிலே இருப்பது போன்ற தோற்றம் தருகிறது! உடுமலை ராதாகிருஷ்ணன் உருக்குலைத்து வைத்த நிர்வாக கட்டமைப்பையும், கையூட்டு கலாச்சாரச்சாரத்தையும் அப்படியே பின்பற்றதக்க வகையில் தான் புதிய தலைவரின் நியமனம் அமைந்துள்ளதோடு, மீண்டும் மாறன் பிரதர்ஸ் தலை தூக்கும் அபாயமும் தெரிகிறது என்கிறார்கள் கேபிள் இண்டஸ்டிரியில்! உண்மையா..? மலிவான கட்டணத்தில் தருகிறோம் என்று அரசு கேபிள் மீதான மக்களின் ஈர்ப்பை பெற்று செயல்பட்ட வகையில், முறைகேடுகளில் உச்சமாகவும், சுரண்டலில் மூர்க்கமாகவும் செயல்பட்டவர் உடுமலை ராதா கிருஷ்ணன். தனியார் டிவிக்களை ...

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்கள் கொடி கட்டிப் பறந்தன!அந்த வகையில்,  பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நடந்த ஊழல்கள் ‘அடேங்கப்பா’ ரகம் ! கமிஷன் , கலெக்‌ஷன், கரப்ஷன் ஆகிய முழக்கங்களை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக மக்கள் முன்பு முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்தது திமுக !. இந்த சூழலில்தான், அதிமுக அரசில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையை பேரவையின் தாக்கல் செய்தது திமுக அரசு.. அதில் பொதுத் துறை ...

அதி மோசமான கடந்த அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். பத்தாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள திமுக ஆட்சியாளர்கள் ஒரு பக்குவத்தை பெற்றிருப்பார்கள் என மக்கள் நம்பினார்கள்! ஒரு பக்கம் மக்கள் விரோத – மாநில உரிமைகளை பறிக்கும் பாஜக ஆட்சியை எதிர்க்க வேண்டிய சரித்திர கடமையையும் திமுக சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் எப்படி இந்த ஊழல்களுக்கு துணை போகிறது? முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இது போனதா எனத் தெரியவில்லை. இந்த ஆட்சியில் சில நல்ல முன்னேற்றங்கள், பாசிட்வ்வான அணுகுமுறைகள் நிதித் துறை, ...

பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்  துறையில் நடந்த ஊழல்களை, அந்த ஊழல்கள் மூலம் எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என்கிற விவரங்களைக் கண்டுபிடிக்க அதிவேகப் பாய்ச்சலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தி.மு.க ஆட்சியின் நெடுஞ்சாலைத்  துறை அமைச்சர் எ.வ.வேலு. ஆனால், அவரது நோக்கம் ஊழலை ஒழிக்கவா? ஒளிக்கவா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது..! அதிமுக ஆட்சியின் ஊழலை  அம்பலப்படுத்த சாலைகளில் ஆய்வு எ,வ.வேலுவின் கவனம் முதலில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு  ஒப்பந்தங்கள் மூலம் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ‘ஐந்து வருட குத்தகை ஊழல்’ மீது சென்றது. 4,500 கோடி ...