அதிமுக பொதுக் குழு தொடர்பாக நீதிமன்றங்கள் எத்தனை முறை தான் எப்படியெல்லாம் மாற்றி, மாற்றி நியாயம் பேசுவார்களோ..! இரண்டுங் கெட்டான் தலைமையில் அதிமுகவை கொண்டு நிறுத்துவதே பாஜகவின் நோக்கம்! அந்த நோக்கத்தை ஈடேற்றவே நீதித் துறையிலும் பெரும் நிர்பந்தம் செலுத்தப்பட்டதோ…? சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துவிட்டு அதை செல்லாமல் ஆக்கிய வழக்கில் இவ்வளவு மெனக்கிடல்கள் இல்லை. ஆனால், ”எங்க ஆளான ஒ.பன்னீர் செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தூக்க அனுமதிப்பதா?” என பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் கமுக்கமாக காய் நகர்த்தி வருகிறது. ...
இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கிடையான தனி நபர் அதிகாரப் போட்டியாக மட்டும் இதை சுருக்கிப் பார்த்து விட முடியாது. இதன் பின்னணியில் உள்ள ஆதிக்க சக்திகள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற புரிதல் இல்லாமல் இதை அணுக முடியாது! ஒ.பி.எஸை தூக்கி சுமப்பவர்கள் யார் என பார்க்க வேண்டும்! அதிமுக பொதுக் குழு நடத்துவது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விவாதிக்கப்பட்டு வருவது பெரிய துரதிர்ஷ்டமாகும். இன்றைய தினம் உச்சநீதிமன்றம், ”ஓ.பி.எஸ் தரப்பிடம் உங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை நீங்களே பார்த்து கொள்ளுங்கள். கட்சி விவகாரங்களில் ...
போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு உள்ளார். குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்பட வில்லையாம்! அப்பாவியான அவர் மீது தவறாக குற்றம் சாட்டி வழக்கு புனையபட்டதாம்! வாரே வா! சூப்பர்! ஆர்யன்கானின் நண்பர்கள் அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேரும் கப்பலில் பயணம் செய்தனர் என்பதற்காக அவர்கள் போதைப்பொருள் சதியில் ஈடுபட்டதாக கருதிவிட முடியாது ...
‘ஒரு பெண் தன்னார்வத்துடன் கொள்ளும் பாலியல் உறவு குற்றமாகாது, சட்டத்திற்கு புறம்பாகாது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கண்ணியக் குறைவாக யாரும் நடத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது! மிக நுட்பமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய இந்த தீர்ப்பு குறித்து சில பெண் ஆளுமைகளின் கருத்து! ”என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே, இது தான் ஐயா பொன்னகரம்” என்று ஒரு புகழ்பெற்ற கதை முத்தாய்ப்பாக முடியும். அடிபட்டு கிடக்கும் தன் கணவனுக்கு பால், கஞ்சி வாங்குவதற்காக, அம்மாளு இருளில் ஒதுங்கி முக்கால் ...
31 ஆண்டு சிறைவாசம்! 20 ஆண்டுகளாக காத்திருப்பில் வைக்கப்பட்ட கருணை மனுக்கள்! முடிவெடுக்காமல் மத்திய அரசுகள் காட்டிய மாபெரும் மெத்தனம்! ஆட்சியாளர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தெளிவான ‘பொலிடிக்கல் வில் பவர்’ இல்லாமை ஆகியவற்றின் விளைவே நீதிமன்ற தீர்ப்பு! சரியான நேரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக முடிவெடுத்துள்ளது. இன்றைக்கு உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் அன்றே இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி வி.ஆர்.கிருஷணய்யர் போன்றோரும், சதாசிவம் போன்றோரும் வெளிப்படுத்திய ஆதரவான கருத்துக்களே அடித்தள காரணமாகும் என்பதை நாம் நினைவு ...
ஏன் இவ்வளவு குளறுபடிகளை செய்துள்ளது தமிழக காவல் துறை? உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தலை குனிய நேர்ந்தது எதனால்..? ராஜேந்திர பாலாஜியை தண்டிக்கும் நோக்கம் உண்மையில் தமிழக அரசுக்கு இருக்கிறதா? இல்லை தண்ணிகாட்டி விட்டுவிடுவது தானா? ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடமும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற ராஜேந்திர பாலாஜி மீது ஆகஸ்ட் மாதம் தொடங்கி சுமார் 32 மோசடிப் புகார்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வந்துள்ளது! இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசும், காவல்துறையும் அசமந்தமாக இருப்பதாகவே தெரிகிறது. ...
‘எதற்காக இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்..?’ என ராஜேந்திர பாலாஜி கைது தொடர்பாக தமிழக அரசை கேள்வி கேட்கிறது உச்ச நீதிமன்றம்! ஆனால், பல வழக்குகள் நிலுவையில் இருக்க, இவ்வளவு அவசரமாக ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே எடுத்துக் கொண்டது ஏன்…? மோசடி குற்றங்கள் செய்து ஓடி ஒளிந்த ராஜேந்திர பாலாஜிக்காக இவ்வளவு பொங்க வேண்டிய அவசியம் என்ன..? ஊருக்கென்றே உழைத்த உத்தமரை தமிழக காவல்துறை கைது செய்துவிட்டது போலும்! ”நீதிமன்றத்தை ஏன் தர்ம சங்கடப் படுத்துகிறிர்கள்..” என ...
சின்னப்பா பாகவதர் காலம் தொடங்கி சினிமாவில் சிகரெட் காட்சிகள் குறையின்றி தொடர்ந்து கொண்டுள்ளன! மக்களிடம் மிக வலுவான தாக்கம் ஏற்படுத்தும் துறைகளில் முக்கியமானது சினிமா. சினிமாவில் வரும் எது ஒன்றும் பிரபலமாகும், பின்பற்றப்படும். பொதுவாக சிகரெட் பிடிப்பது குற்றமாக கருதப்பட்ட நமது சமூகத்தில் அதை கடைக்கோடி மனிதன் வரைக்கும் சகஜமான ஒன்றாக மாற்றியதில் திரைப்படத் துறைக்கு பங்கிருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பலரிடம் நடந்தப்பட்ட அந்த ஆய்வில் 53 சதவிகிதமானோர் தங்கள் புகைப்பழக்கத்திற்கு சினிமா ஒரு தூண்டுதலாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து தான் ...
ஓட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்துவிட்டது! உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை உலுக்கி எடுத்துள்ளது! ஆனால், இன்று வரை இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயலைக் கண்டிக்கவோ, வருத்தப்படவோ பிரதமர் மோடியும்,,உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்வரவில்லை! எனில், நடந்த சம்பவங்களுக்கு இவர்களின் ஒப்புதல் இருந்தது என்று நாம் புரிந்து கொள்ளலாமா? உலகில் நடக்கும் பல சம்பவங்களுக்கு டிவிட் போடுபவர் மோடி! தமிழ்நாட்டில் திண்டுக்கல் லியோனி பேசிய ஒரு பேச்சுக்கு டெல்லியில் இருந்து வந்து கண்டனம் தெரிவித்தவர். இந்தப் படுகொலைகளை ...
பிடிக்காதவர்கள் மீது அவதூறு எழுதுவதும், பிடித்தவர்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும் மூடிமறைத்து அலட்சியப்படுத்துவதும் தினமலரின் வாடிக்கை! கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்கான போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம்..போன்ற மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தி எழுதும். கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை இழிவுபடுத்தி எழுதும். முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கும். காவல்துறை என்ன செய்தாலும் கண்ணை மூடி ஆதரிக்கும்! ஏத்தாபூர் வியாபாரி முருகேசன் போலீசால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் விஷிவலாக வெளியாகி அனைவரும் ...