துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவ மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழும், (UAPA), 505 இந்தியன் பீனல் கோட் சட்டப்படியும் போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய ஒரு சட்டத்தை கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய இளம் மாணவர்கள் மீது போட்டுள்ளனர். இன்று, நேற்றல்ல, எனக்கு விபரம் தெரிந்தது முதல் நான் கிரிகெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் ...

கேட்க காதுகள் கூசுகின்றன! மனம் அதிர்கிறது. அவ்வளவு மரியாதை குறைவான வார்த்தைகள்! இத்தனைக்கும் இவரே ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தவர் தான்! தன் இளைய சகாக்களைக் குறித்து இவ்வளவு தரக்குறைவாக பேசும் இவரை தடுக்க யாருமே இல்லையா..? வசீகரமான தமிழ் மொழியை வெறும் வசவு மொழியாக்கி வரம்பு மீறி பேசிக்  கொண்டிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கு தீர்வே இல்லையா..? சமீபத்தில் ஐபிஎல் போட்டிகள் வளைகுடா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் அதனை நேரலையில் நாம் பார்த்தோம். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வாகை சூடியது. இந்த கொரோனா 19 தொற்றுப் பரவல் காலத்தில் எந்தவிதமான பெரிய தொந்தரவும் இல்லாமல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி முடித்தது. அதற்கு முதலில் ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இப்போது நான் தலைப்புக்குள் வருகிறேன். ஒவ்வொரு நாளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நேரலையில் ஐபிஎல் போட்டிகளை நாம் பார்த்தோம். சடகோபன், பத்ரிநாத், ஆர், ஜெ. பாலாஜி ஆகியோர் சிறப்பாக வருணனை செய்தார்கள். தேவையான நேரத்தில் தகுந்த புள்ளி விவரங்களைத் தந்து ஆட்டத்தின் கோணங்களை நன்றாகவே விளக்கினார்கள். ஆர்.கே, பாவனா,   அபினவ் முகுந்த், எஸ்.ரமேஷ், நானியும் சிறப்பாகவே தங்கள் பணியை சிறப்பாக செய்தார்கள். ...

இன்னும் அவரது மறைவு நம்பமுடியாத செய்தியாகவும், மீள முடியாத துக்கமாகவும் என்னை ஆக்கிரமித்துள்ளது..! அப்துல் ஜப்பார் அய்யாவை அவரது மகன் ஆசிப் மீரானின் வழியேதான் நான் அறிந்தேன். கிரிக்கெட் வர்ணனையாளர் என்னும் அடைமொழியைத் தாண்டிய அவருடைய இலக்கியப் பங்களிப்பை ‘காற்று வெளியினிலே’ நூலின் வழியே நான் அறிய நேர்ந்தது! சுயசரிதம் போல் அமைந்த அந்நூலில், அவருடைய இளவயது ஆர்வங்களும் ஆசைகளும் வெளிப்பட்டுள்ளன. இலங்கை வானொலியில் நாடக நடிகராக வாழ்வைத் தொடங்கிய அப்துல் ஜப்பார், அதன்பின் பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கிறார். ஊடக மொழிக்கு கவர்ச்சியையும், வசீகரத்தையும் ...