ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகரம் வழக்கத்தை விட இந்த முறை அதிகமாகவே பட்டாசுப் புகையில் சிக்கித் திணறியது. மேக மூட்டமும், விடாமல் பெய்த மழையும், குளிரும்,  முதியவர்களுக்கும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் சற்று சிரமத்தை தந்தன! விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததற்காக தமிழ்நாட்டில் 1614 வழக்குகளும் சென்னை மாநகரில் 758 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 517 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு கடை நடத்தியதற்காக 239 வணிகர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.  நூற்றுக்கு மேற்பட்டோர் பட்டாசுவெடியால் ...

நெஞ்சைப் பிளக்கும் கோர விபத்துக்கள் இல்லாத தீபாவளி என்பது கடந்த கால் நூற்றாண்டாக ஒரு நிறைவேறாத கனவாகவே தொடர்கிறது. எதைத் தவிர்த்தால்.., இந்த கோர விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என அலசுகிறது இந்தக் கட்டுரை! சடசடவென்ற வெடிச்சத்தங்கள், கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளம்.. இல்லாத தீபாவளியை நினைத்துக் கூட பார்க்கமுடியாத ஒரு நிலைக்கு சமூகம் வந்துவிட்டது. ஆனால், விபத்துகள், உயிரிழப்புகள் இல்லாத தீபாவளியை நம்மால் ஏன் சாத்தியப்படுத்த முடியவில்லை..? தீபாவளி பட்டாசுகளுக்கான விபத்துக்கள் மூன்று வகை! ஒன்று தயாரிக்கும் இடங்களில் நடக்கும் விபத்துகள்! ...