வன்மமே வடிவமாக, வெறுப்பே வேலை திட்டமாக, ஒரு குறிப்பிட்ட சாதி மேலாதிக்கத்தை உறுதிபடுத்துவதையே உள்ளார்ந்த இயக்கமாகக் கொண்டு வெளிவரும் ஒரே நாளிதழ் உலகத்திலேயே தினமலராகத் தான் இருக்கும். உள் நோக்கங்களுக்கு கற்பனை வடிவம் தந்து தலைப்பு செய்தியாக்கும் – இதழியல் தர்மத்திற்கே எதிரான – போக்குகளை அனுதினமும் செய்து மக்களிடையே குழப்பத்தையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது தினமலர்! சுருங்க சொல்ல வேண்டுமென்றால், உலகில் உள்ள தீமைகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து பார்த்தால் அது தினமலராக வெளிப்படுவதை உணரலாம். விலை போகக் கூடிய அரசியல் தலைவர்களை ...
பிடிக்காதவர்கள் மீது அவதூறு எழுதுவதும், பிடித்தவர்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும் மூடிமறைத்து அலட்சியப்படுத்துவதும் தினமலரின் வாடிக்கை! கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்கான போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம்..போன்ற மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தி எழுதும். கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை இழிவுபடுத்தி எழுதும். முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கும். காவல்துறை என்ன செய்தாலும் கண்ணை மூடி ஆதரிக்கும்! ஏத்தாபூர் வியாபாரி முருகேசன் போலீசால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் விஷிவலாக வெளியாகி அனைவரும் ...
‘’சார், தினமலர்ல இருந்து பேசறோம்..இந்த..ஆ.ராசா..இப்படி ஆபாசமா பேசியிருக்காறே..அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க…?’’ ‘’என்ன பேசியிருக்கார்..தெரியலையே.. அதாங்க…,முதல்வர் இ.பி.எஸ்சோட அம்மாவைப் பற்றி ஆபாசமா பேசியிருக்கார்..அது பற்றி உங்க கருத்து வேணும்’’ ‘’நான் பார்க்கலையே எனக்கு ஒன்னும் தெரியாது…’’ ‘’அதான்ங்க..இன்னைக்கு எங்க தினமலரில் கூட போட்டு இருந்தோமே..உங்களுக்கு வேணா வாட்ஸ் அப்பிலே அனுப்புகிறோம்..படிச்சுட்டு சொல்றீங்களா…’’ ‘’நீங்க தினமலரா? இதுக்கு முன்னாடி எந்தெந்த விவகாரத்திற்கெல்லாம் எங்கிட்ட கருத்து கேட்டீங்க..எதுவுமே கேட்டதில்லை. இது என்ன புதுசா கேட்கிறீங்க..’’ ‘’அப்படி இல்லீங்க..அரசியல்ல கண்ணியமா பேசணுமில்லையா..ஆனா, அவரு கண்டபடி இ.பி.எஸ்சோட அம்மாவைப் பற்றித் ...