ஒரு தனி நபரோ,சமூகமோ அது எந்த அளவுக்கு நாகரீகமடைந்துள்ளது, பண்பாட்டு ரீதியாக பண்பட்டுள்ளது என்பதற்கான அளவுகோல் பெண்கள் குறித்த பார்வை தான்! பெண்களை சமத்துவத்துடன் நடத்த முடியாத தனி நபரோ,சமூகமோ மேம்பட்ட அடையாளத்தை பெற முடியாது. பாஜக அரசு எவ்வளவு பத்தாம் பசிலித்தனமான அரசு என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று வேண்டாம்! தேசியப் பாதுகாப்பு அகாடமி  இந்திய இராணுவத்தின் முப்படைக்கான பயிற்சி வழங்கும் நிறுவனமாகும். 1954-இல் துவக்கப்பட்ட இந்த இராணுவப் பயிற்சி அகாடமி, மகாராட்டிரா மாநிலத்தின் புனேயில் செயல்படுகிறது. தேசியப் பாதுகாப்பு அகாடமியின் தரைப்படைப் ...

அடிமாட்டுக் கூலி, அடிப்படை வசதிகளற்ற அவலம், கூடுதல் வேலை,இரக்கமற்ற சுரண்டல், கேட்க நாதியற்ற துயரம், சட்டப் பாதுகாப்பின்மை…இந்தச் சூழல்களுக்கு இடையில் தான் புலம்பெயர் தொழிலாளர்கள் நம்மிடையே கவனிபாரற்று வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச புலம் பெயர்ந்தோர் நாளான  இன்று அவர்கள் படும் பாடுகளை சற்றே பார்ப்போமா…? “கோயமுத்தூரில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. இதன் கட்டுமானத்தில்   புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட குறைவாகவே வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவரின் கண்முண்ணே நடைபெறும் விதிமீறலை  அவர் கண்டுகொள்ளவில்லை. பீகாரில் இருந்தும், ஒரிசாவில் ...