பொய், வன்முறை, அத்துமீறல், அராஜகம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்றி விடலாம் என நினைப்பதாகத் தெரிகிறது. நான்கு நாட்களில் ஐந்து சம்பவங்களை தமிழகத்தில் அரங்கேற்றியுள்ளது பாஜக! அண்ணாமலையின் அராஜக அரசியலுக்கு திமுக ஏன் இவ்வளவு பலவீனமாக எதிர்வினையாற்றுகிறது..? தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றது முதல் திமுகவிற்கு எதிரான ஒரு போர் அரசியலை முன்னெடுத்து வருகிறார். ஒருவித வன்ம அரசியலை வளர்ப்பதிலும், வெறுப்பு அரசியலை வேகப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது தெளிவாக உணர முடிகிறது. இதற்காகவே தமிழகத்தில் பல கொலை,கொள்ளை ...
தமிழக அரசும், காவல் துறையும், உளவுத் துறையும் இந்துத்துவ சக்திகளின் அரசியல் அஜந்தாக்களை நிறைவேற்றத் துணை போகிறதோ..? என திகைக்க வைக்கும் சம்பவங்கள்! திசை மாறுகிறதா திராவிட மாடல்? கள்ளக்குறிச்சி சம்பவம் தொடங்கி, பிரதமர் மோடி வருகை வரை ஒரு பார்வை! ”நடப்பது திராவிட மாடல் ஆட்சியாக்கும்” என்று அது குறித்த பெருமிதங்களையும், கற்பிதங்களையும் மேடைகளில் எழுத்துக்களில் தொடர்ந்து கட்டமைத்து வந்தது திமுக! ஆனால், நடைமுறையோ அதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் உள்ளது. ‘விட்டுக் கொடுத்து போவது’, ‘விரோதமில்லாமல் நடந்து கொள்வது’ என்றால், அதில் தவறு ...
தயாளன், தாம்பரம், செங்கல்பட்டு பாஜகவை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதை போல் திராவிட கழகம் திமுகவை ஸ்டாலின் காலத்திற்கு பின் வழி நடத்தினால் ? பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்சுக்கும் உள்ள உறவு குரு – சிஷ்ய உறவு! இதில் கமிட்மெண்ட் உண்டு! குருவுக்கு பரிபூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குருவை மிஞ்சியவர்களாக சிஷ்யர்கள் தங்களை ஒரு போதும் கருதுவது இல்லை. கொள்கை இவர்களை வழி நடத்துகிறது. நமக்கு இவர்கள் கொள்கையில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்டமைக்கப் பட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. திராவிட இயக்கம் தான் ...
டாஸ்மாக் என்பது அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை மட்டுமல்ல, நூதனக் கொலை! மது என்ற பெயரில் மெல்லக் கொல்லும் விஷச் சரக்கு! பத்து ரூபாய் சரக்கை நூறு ரூபாய்க்கு விற்பது போதாது என்று இன்னும் விலையேற்றுவதா? மதுவின் உற்பத்திக்கும், விற்பனை விலைக்கும் நியாயம் வேண்டாமா? உலகத்திலேயே இரக்கமற்ற முறையில் செய்யப்படும் வியாபாரங்களில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்த்தை தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் விற்னைக்கு தரலாம்! ஒரு பொருளை உற்பத்தி விலைக்கு மேல் எவ்வளவு விற்கலாம் என்பதற்கு ஒரு குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் ...
எவ்வளவு பெரிய அவமானம்! கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அவலம், கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமை இவற்றின் விளைவாக, ”குற்றவுணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்…” என ஸ்டாலின் சொன்னது ஒரு நெகிழ்ச்சியைத் தந்தாலும், உள்ளாட்சி தேர்தலை திமுக தலைமை அணுகிய விதத்தில் தொடங்குகிறது எல்லாமே! உள்ளாட்சி அமைப்புகள் அவற்றுக்குரிய பூரண சுதந்திரத்துடன் இயங்க அனுமதிப்பதே ஒரு முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை என்றாலும், அதை நடைமுறைப்படுத்த இன்றைய கட்சித் தலைமைகளின் சர்வாதிகார கண்ணோட்டங்கள் ஒத்துழைப்பதில்லை. ‘அடிமட்டம் ...
உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது திமுக! மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிவிட்டது! நகராட்சிகளில் 138ல் 133 ஐ வென்றுள்ளது. 489 பேரூராட்சிகளில் 400 க்கும் மேற்பட்டவற்றை வென்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய அதிமுகவையும், பாஜகவையும் மிகவும் பின்னுக்கு தள்ளியுள்ளது! இமாலய வெற்றி தான்! ஆனால், இந்த வெற்றியை ஈட்ட திமுக கையாண்ட முறைகள், இந்த தேர்தலை ஆளும் கட்சி அணுகிய விதம் போன்றவற்றை உள்ளட்டக்கித் தான் இந்த வெற்றியை நாம் பார்க்க வேண்டியுள்ளது..! நாடாளுமன்ற சட்டமன்ற, தேர்தலின் போது பாஜக எதிர்ப்பும், ...




















