உத்திரப் பிரதேசத் தேர்தல் உக்கிரமடைந்து கொண்டுள்ளது. மீண்டும் பாஜக ஆட்சி வருவதற்குத் தான் வாய்ப்பு உள்ளது என பல ஊடகங்களும் சொல்லி வந்தன. ஆனால், தற்போதோ, பாஜக கூடாரமே காலியாகி, பலத்த பின்னடைவை கண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. உத்திரபிரதேச அரசியல்; சுதந்திரமடைந்து முதல் 40 ஆண்டுகள் காங்கிரசின் கோட்டையாகத்  திகழ்ந்தது உத்திரபிரதேசம். 1990 களுக்கு பிறகு உ.பி மாநிலக் கட்சிகளின் கோட்டையானது. சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகியவை மட்டுமே பலம் பொருந்திய கட்சிகளாக இருந்தன. ஆனால், 2014 முதல் பாஜக தலைதூக்க ஆரம்பித்தது. ...

பித்தலாட்டத்தின் உச்சமாக நடந்து முடிந்துள்ளது அதிமுக தலைமைக்கான தேர்தல்! தேர்தல் கமிஷன், சொந்த கட்சியினரை மட்டுமல்ல, சகலரையும் முட்டாளாக்கி உள்ளது இந்த தேர்தல்! சசிகலாவை தன் அதிகாரத்தை உறுதிபடுத்திக் கொள்வதற்கான பகடைக் காயாக்கிக் கொண்டுள்ளார் பன்னீர்! சில நிர்வாகிகள், ‘கட்சியில் தங்களுக்கு செல்வாக்கு உள்ளது. நாங்கள் இந்த பதவிக்கு போட்டியிடுகிறோம்’ என்றும் வேட்பு மனு அளித்திருந்தனர். அதன்படி முதல் நாளான 3-ந் தேதி 154 மனுக்கள் வந்திருந்தது. 2-ம் நாளான 4-ந் தேதி 98 மனுக்கள் வந்தது. இன்னும் சிலரையோ மனுப் போடவே அனுமதிக்கவில்லை! ...

ஜனநாயகம் என்பது பொது நலன் சார்ந்து ஒன்றுபட்டு செயலாற்றுவது! ஆனால், தன்நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட தற்குறிகளான சில சந்தர்ப்பவாதிகள் கைகோர்த்து செய்யும் சதிசெயலைத் தான் ஜனநாயகம் என்பதாக  நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்! முதலில் தெரியாத்தனமாக நானும் கூட நம்பிவிட்டேன். அடடா, இதுவல்லவோ ஜனநாயகம்! அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரையும், துணை ஒருங்கிணைப்பாளரையும் கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் தேர்ந்தெடுப்பார்களாம்! அப்படியான சட்டவிதியை தற்போது ஏற்படுத்தி உள்ளார்களாம்! பத்திரிகைகள் இது பற்றி பலவாறாக எழுதின! ”இது எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகாரத்திற்கு வைக்கப்பட்ட செக்” என ஒரு பத்திரிகை எழுதியது. ”ஒ.பி.எஸ் ...

சிபி, பேரளையூர், கடலூர் ”இந்து விரோதி” என்ற பாசகவின் விமர்சனத்திற்கு ஸ்டாலின், ‘தன் கட்சியில் பெரும்பான்மை இந்துகள் தான்’ என்றார். மம்தா, ”மதத்தை வைத்துப் பிரிவினை முடியாது” என்கிறார். இது குறித்து.? திமுக இந்துக்களை தாஜா செய்யக் கூடிய கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது என்றாலும், அது ஒரு போதும், சிறுபான்மையினரை தாக்கும் கட்சியாக மாறாது. ”மதத்தை வைத்து பிரிவினை முடியாது” என்ற மம்தாவே கூட மேற்குவங்கத்தில் ராமரை முன்னிறுத்திய பாஜகவிற்கு மாற்றாக துர்க்கையை அடையாளப்படுத்தும் அரசியலைk கையில் எடுத்தார் என்பதே யாதார்த்தம்! மருதமலை மகேஷ், ...

உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி மட்டுமல்ல, பிரமிக்கதக்க வெற்றியும் பெற்றுள்ளது! இந்த வெற்றி எப்படி சாத்தியமானது..? இந்த மிருகபல வெற்றி நியாயமானதா? இந்த வெற்றியில் அனேக அனுகூலங்கள் இருந்தாலும், சில ஆபத்துகளும் புதைந்துள்ளன! மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன! மொத்தமாக உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன! இதில் முக்கிய ...

எஸ்.லஷ்மி, காஞ்சிபுரம் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளதே? வாழ்த்துகள்! ஆளும் கட்சியின் விஸ்வரூப வெற்றி, ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக மாற வாய்ப்புண்டு! ஆர்.நாராயணன், ஆத்தூர், சேலம் மனித வெடிகுண்டு தாக்குதல் என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் வகையில் சாட்டை துரைமுருகன் சீமானை வைத்துக் கொண்டே பேசியிருப்பது பற்றி? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சட்டம், ஒழுங்கிற்கு மொத்த குத்தகையாளராக காட்டிக் கொள்ளும் தமிழக பாஜக, இதில் அமைதியாக ரசிப்பதை கவனியுங்கள்! மு.பாண்டியன், அனுப்பானாடி, மதுரை திமுகவின் சீனியர் தலைவர் துரைமுருகன் ...

ஊராட்சி தேர்தல் அறிவிப்பு வந்தது தொடங்கி அரசியல் கட்சிகள் பரபரப்பு அடைந்துள்ளன! கட்சி செல்வாக்கோ, கட்சித் தலைமையின் செல்வாக்கோ கருதி விழும் ஓட்டுகளை விட ஒருவர் உள்ளூருக்கு உண்மையாக உழைக்கக் கூடியவரா.? என மக்கள் கணித்து ஓட்டுப் போடும் ஒரே தேர்தல் இது தான்! இந்த தேர்தலை எதிர் கொள்வது எப்படி..? மகிழ்ச்சி! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த ஒன்பது மாவட்டத்தில் ஊராட்சி தேர்தல் வரவுள்ளது! விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், அவற்றிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, ...

ஒரு பக்கம் மதுவாலும், மற்றொரு பக்கம் மின் துறையில் 1,73,000 கோடி நஷ்டத்தாலும் தமிழகமே தள்ளாட காரணமானவர் அமைச்சர் தங்கமணியே! இந்த வகையில் தங்கத் தமிழகத்தை தகரத் தமிழகமாக மாற்றியதில் தன்னகரில்லா சிறப்பிடம் தங்கமணிக்கு உண்டு! சாதாரண அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த தங்கமணி இன்று ஒட்டு மொத்த நாமக்கல் மாவட்டத்தையும் விலைபேசி வாங்கும் அளவுக்கு செல்வச் செழிப்பில் மலைபோல விஸ்வரூபமெடுத்து கரன்சிகளைக் கொண்டு வெற்றியை கைப்பற்ற துடிக்கிறார்…! குமாரபாளையம் தொகுதி ஏழை,எளிய உழைப்பாளி மக்கள் நிறைந்த தொகுதி! ஒரிரு கைத்தறிகளையோ, விசைத்தறிகளையோ வைத்துக் ...

தற்போதைய தமிழ் திரை உலகில் ட்ரெண்டிங்கில் முதலிடம் வகிப்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தான். நாட்டில் நடக்கும் பொது தேர்தலைப் போல ஏகபரபரப்புகளுடனும், முஸ்தீபுகளுடனும் களம் காண்கிறார்கள் வேட்பாளர்கள்! மற்ற தேர்தல்கள்  போல இங்கேயும் வாக்களிக்க பணம், இலவசப் பொருட்கள் கொடுப்பது போன்ற  விரும்பத்தகாத  நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் உள்ளன. கோல்ட் காயின், ரிசார்ட் கிப்ட் வவுச்சர், அரிசி-பருப்பு, 32″ டிவி,  நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டி, குவார்ட்டர் பிரியாணி என்று பல்வேறு அணியினரும் செயலாற்றிக் கொண்டுள்ளனர். கடந்த தேர்தலில் விஷால் வெற்றி பெற்று ...

ஜனநாயகத்தின் பெயரிலான வாக்கு முறை பற்றி கள ஆய்வு செய்து பல அதிர்ச்சி தரத்தக்க உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளார் இளந்திருமாறன்! தஞ்சை தரணி தான் சொந்த ஊர்! ஆனால்,அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தமிழகத்தில் ஏதாவது. அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம்,சகாயம் ஐ.ஏ.எஸ்சின் மக்கள் பாதை இயக்கம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) ஆகியவற்றிலும் தீவிரமாக பணியாற்றியவர்! தற்போதுள்ள  மோசடிகளை தவிர்க்கவும், வாக்களிக்க வரமுடியாதவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கத்தக்க வகையிலும் ஒரு சாப்ட்வேர் உருவாக்கியுள்ளார்! ஜனநாயகத்தை விட இன்னொரு ...