கம்யூனிஸத்தை பேசவும், எழுதவும் பலர் உள்ளனர். ஆனால், கம்யூனிஸ்டாக வாழ்வது மிகக் கஷ்டமாகும்! ஆனால், காந்தி இயல்பிலேயே கம்யூனிஸ குணாம்சங்களோடு இருந்தார்! அந்தப்படியே தான் அவரது போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி, சேவாகிராம் ஆகிய ஆஸ்ரம வாழ்க்கையை ஒரு கம்யூனாக கட்டமைத்து, யாவருக்கும் சமமான வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்தார்! இன்னும் எத்தனையெத்தனை விவகாரங்களில் அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்டாக வெளிப்பட்டார் எனப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது! காந்தியின் கட்டுரைகளும், பேச்சுகளும் தொண்ணூறு தொகுதிகளாக வந்துள்ளன. அரசியல், சமூகம், பன்னாட்டு விவகாரம்  என பலவற்றை  தொடர்ந்து ...

விடுதலையை நோக்கிய மகத்தான யாத்திரையை உயிர்ப்புடன் சித்தரிக்கும் நூல்! திருமதி சித்ரா தமிழகத்திற்கு தந்துள்ள புத்தகமிது. தமிழகமும் கர்நாடகமும் ஒருசேர அறிந்த புகழ்வாய்ந்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் ’உப்பு என்னும் ஆயுதம்’ என்கிற சுருக்கமான அறிமுகவுரையை தந்துள்ளார்.  வானத்தில் வட்டமிடும் பறவையின் வேகம் எப்போதும் கொண்டவர் சித்ரா என பாவண்ணன் அறிமுகம் நிறைவான வரியைத் தருகிறது. அன்று இருந்த இந்திய அரசியல் சூழல்- வரிகொடா இயக்கம், சத்தியாகிரக போராட்டங்கள் ஊடாக  உப்பை ஆயுதமாக்கி மக்கள் திரள் போராட்டமாக தண்டியாத்திரை நடந்ததை பாவண்ணன் சொல்லி செல்கிறார். காந்திய அணுக்கம் ...