கள்ளக் குறிச்சி மாணவியின் மரணத்தை அரசு நிர்வாகம் கையாண்ட விதம் தான் அந்தப் பகுதியை இன்று கலவர பூமியாக மாற்றியுள்ளது. செல்வாக்கான நிர்வாகத்திற்கு சார்பாக அரசு நிர்வாகம் இருக்கிறது என்ற தோற்றம் நாளுக்கு நாள் வலுத்த நிலையில் நான்காவது நாள் அது தீவிரம் பெற்று வன்முறை வடிவம் கண்டுவிட்டது. அந்தப் பள்ளியை நடத்துபவர் பாஜகவில் செல்வாக்கு மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதனால், தமிழக அரசுக்கு ஏதேனும் அரசியல் அழுத்தம் தரப்பட்டு இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால், பொதுவாகவே இது போன்ற பிரச்சினைகளில் சக்தி வாய்ந்த ...
இந்தியா முழுமையிலும் தஞ்சை மாணவி மரணம் ஒரு விவாத பொருளாகியுள்ளது. மதமாற்ற நிர்பந்தம் நடந்துள்ளதா? அல்லது தனிப்பட்ட டார்ச்சர் எனும் மனித உரிமை மீறலா ? பொய்யைப் பரப்பி பாஜக தூண்டுகிறதா..? உண்மையில் நடந்தவை என்ன? அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழியின் மகள் லாவண்யா (17) தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தூய இருதய மேல் நிலை பாடசாலை என்ற உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்தார். அவர் தங்கியிருந்த ஹாஸ்டலின் நிர்வாகி ...
”இந்துக்கள் என்றால்,இளக்காரமா..? பாதிரியார்கள் நடத்தும் பள்ளியில் குற்றமே நடக்கவில்லையா..?’’ ”பிராமணர்கள் நடத்தும் பள்ளி என்பதால் தாக்கலாமா..? பள்ளியில் சீட்டு கேட்டு கிடைக்காதவர்கள் கிளப்பும் புரளி தான் இது..?’’ ”கொரோனா பிரச்சினையை மறைக்க திமுக இந்த விவகாரத்தை ஒரு கருவியாக்கிக் கொள்கிறது.’’. ”அந்த பள்ளிக் கூடத்தை ஆட்டையப் போட திமுகவினர் முயற்சிக்கிறார்கள்!’’ ‘’முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரும் இதில் இழுக்கப்படுவதால் களங்கம் ஏற்படும் முன்பு இதில் முதல்வர் தலையிட வேண்டும்!’’ ”அந்த வாத்தியார் பற்றி யாரும் இது வரை புகார் ...