பாஜக தலைமையின் அம்பு தான் கவர்னர். போராட்ட உணர்வும், அஞ்சாமையும் இருந்தால் மட்டுமே பாஜகவின் பாஸிச அரசியலை எதிர் கொள்ள முடியும். இதே பாஜக கவர்னர்கள் மேற்கு வங்கத்திலும், தெலுங்கானாவிலும்,டெல்லியிலும் எப்படி தள்ளாடுகிறார்கள் என ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் ஒரு விஷயத்தை நன்கு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது! அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்பது சுயேட்சையாக செயல்பட முடியாத ஒரு அமைப்பு! அதன் ஒவ்வொரு நகர்வையும், செயல்பாட்டையும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் தான் தீர்மானிக்கிறார். தற்போதைய ...
க. நாகராஜன், அருப்புக் கோட்டை நீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை இன்னும் குடியரசுத் தலைவருக்கே அனுப்படவில்லையாமே? செப்டம்பர் 20 ஆம் தேதி நீட் தேர்வு தொடர்பான அந்த அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பட்டதாக நம்பி நாம் காத்துக் கிடக்கிறோம். அது, இன்னும் தமிழக ராஜ்பவன் டேபிளில் இருந்து கூட நகரவில்லை என்பதும், அதைக் குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரி முதல்வர் கவர்னரை தற்போது சந்தித்து வேண்டியுள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன! பல கோடி மக்களின் விருப்பம், அவர்களின் வாழ்வை பாதிக்கும் அம்சம்…எப்படி ...
தேர்தல் ரிசல்ட் வந்த அடுத்த நாளே மே 7 ஆம் தேதி புதுவை முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் ரங்கசாமி! ஆனால், துணை முதல்வர் உட்பட நான்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அழுத்தம் தந்தததால் அமைதியாக இருந்த ரங்கசாமி 9 ந் தேதி கொரானாவை காரணமாக்கி, சென்னை வந்து பத்து நாட்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டு புதுச்சேரி திரும்பிவிட்டார்! அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மாநில எல்லையில் ஆரவாரமான வரவேற்பு தந்துள்ளனர்! அதை பெற்றுக் கொண்டு நேராக அப்பாசாமி பைத்தியம் கோயிலுக்கு போய் வணங்கியவர் ...