விவசாயக் கூலி, தள்ளுவண்டிக்காரர், தினக் கூலிகள், ஆட்டோ தொழிலாளி, வீட்டு வேலை செய்யும் பெண்கள் இவர்களைப் போன்ற ஏழை, எளியவர்கள் எல்லாம் 60 வயதானதும் பென்ஷன் வாங்குவதற்கு அரசு ஒரு எளிய திட்டம் வைத்துள்ளது! அதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், நிரந்தரமில்லாத வேலை செய்து கொண்டு இருக்கும் ஏழை, எளியவர்கள், தினக் கூலியாளர்கள்  எந்த நேரமும் பொருளாதாரச் சிக்கலில் இருப்பார்கள். வருமானம் பற்றாக்குறையாகவே  இருக்கும். 60 வயதுக்கு பிறகு பொருளாதார ரீதியாக எப்படி வாழப் போகிறோம் என்று யோசித்தே ...

குற்றவாளிகள் அதிகாரம் மிக்கவர்களாக ஆகிவிடுகிறார்கள்! நிரபராதிகளும், நியாயத்தை கேட்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்! குஜராத் கலவரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக இடையறாது துணிச்சலாக குரல் கொடுத்த தீஸ்தா செதல்வாத் கைது செய்துவிட்டால் உண்மைகள் ஊமையாகுமா? உலகையே உலுக்கிய குஜராத் மதவெறிப் படுகொலைகள் தொடர்பான பல வழக்குகளில் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் 68 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் முக்கியமானது! இந்தப் பகுதியில் வசித்த காங்கிரஸ் எம்.பியான ஜாப்ரி அவர்கள்  கலவரக்காரர்கள் தங்களை சூழ்ந்துள்ளது குறித்து அந்த இக்கட்டான நேரத்தில் அன்றைய முதல்வர் மோடி மற்றும் உயர் ...

நிகழ்காலம் போலவே எதிர்காலமும் முக்கியம். நிகழ்காலப் பிரச்சனைகளால் நாம் எதிர்காலத்தை சிந்திப்பதில்லை. இன்றைய வருமானம் எதிர்காலத்தில் சந்தேகமே. இன்றைய வருமானத்தைச் சரியாகக் கையாண்டால் எதிர்காலம் சிரமம் இல்லை. விபரமில்லாமல் பல மோசடித் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏகப்பட்டவர்கள் ஏமாறுவது ஒரு தொடர்கதையாகி வருகிறது என்பதால், அரசு சேமிப்பு திட்டங்கள் குறித்த ஒரு அறிமுகத்தை இங்கு தருகிறோம். அரசு திட்டங்களில் பயம் தேவை இல்லை! பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை! அரசாங்கம் நாட்டிற்கு ஐந்து ஆண்டு திட்டம் உருவாக்குகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டில் என்ன செய்ய ...

அடுத்தடுத்து காஷ்மீர் பண்டிட்டுகளின் படு கொலைகள்! ”காஷ்மீரின் சமூக உறவுகளை புரிந்து கொள்ளாமல், அரசியல் உள் நோக்கங்களுக்காக ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் செய்யும் அரசியலே இன்று நாங்கள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, வெளியேறும்படி தள்ளப்பட்டு உள்ளோம்” என்கிறது காஷ்மீர் பண்டிட்  கங்க்ரஷன் சமிதி ! காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக 10 பேர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்களாவர். மீண்டும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளது! இதைத் தான் பாஜக அரசு விரும்பியதா..? என்ற ...

மத்திய அரசுக்கு சித்தமருத்துவ  ஆய்வுகள் என்றாலே எட்டிக் காயாகக் கசக்கிறது! அதே சமயம் பல வருட ஆராய்ச்சியில் நடைமுறை ரீதியாக நாம் நிருபித்த சித்த மருத்துவக் கண்டுபிடிப்புகளை ஆயூர்வேத கண்டுபிடிப்பாக மனசாட்சியின்றி மடைமாற்றம் செய்வது இனிக்கிறதோ…? புற்றுநோய் குறித்து சித்த மருத்துவத்தில் பல குறிப்புகள்,  மற்றும் பெரும் மருந்துகள் உள்ளன. சென்னையில் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஜட்ஜ் பலராமையா போன்ற புகழ் பெற்ற சித்த மருத்துவர்கள் புற்று நோய்க்கு வெற்றிகரமாக  சிறப்பு மருந்துகளை  கொடுத்து   பலரை காப்பாற்றி உள்ளனர். இது குறித்து அவர் எழுதிய ...

ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம் என்கிற ரீதியில் ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம். சித்தா தேவையில்லை என்கிறது மத்திய அரசு! நீட் தடை மசோதாவை போலவே, சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தையும் முடக்கி வைத்துள்ளார் கவர்னர்! சித்த மருத்துவத்தை சிதைத்து, சமஸ்கிருத ஆயூர்வேதமே சகலமும் என நிறுவ துடிக்கிறார்கள்! ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம் என்பது என்ன? இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய அரசு இந்திய முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தை முன்மொழிகிறது. சிக்கல் இங்குதான் எழுகிறது தமிழ்நாட்டைத் ...

தரமற்ற கட்டிடங்கள், தகுதியற்ற நிர்வாகம், பகல் கொள்ளையடிக்கும் தாளாளர்கள், பரிதாபத்திற்குரிய ஆசிரியர்கள், பரிதவிக்கும் மாணவர்கள்..! இது போன்ற நிலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசே பொறுப்பெடுத்துக் கொண்டால் என்ன..? திருநெல்வேலி டவுன் செல்லும் சாலையில்  பாளையங்கோட்டையில் ஷாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவிபெறும் பள்ளியில் டிசம்பர் 17 காலை பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ...

அப்துல்லத்தீப், ராணிப்பேட்டை, வேலூர், சி.பி.ஐ, அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலங்களை தங்கள் வசதிக்கு ஏற்ப அதிகரிக்க பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதே? பதவி நீட்டிப்பு வேண்டுபவர்கள் பணிந்து நடக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்கிறார்கள்! சட்டம், நீதி, தர்மம் எனப் பேசும் அதிகாரிகளுக்கு ஆட்சியாளர் போடும் தூண்டில்! எதிர்ப்பவர்களை வேகமாக  இன்னும் சிறையில் தள்ளுவார்கள்! ஜான் ஜேக்கப், நாகர்கோவில், கன்னியாகுமரி திருச்சி அருகே படுகொலையான காவலர் குடும்பத்திற்கு யாரும் கேடாமலே ஒரு கோடி நிதி அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், கொரானாவை ...

தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு பல தடைகளைக் கடந்து நடக்கவுள்ளது. ஆனால், அதை நீட் தேர்வு பாணியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அணுகுகிறதா..? என்ற கேள்வியும், வேதனையும் தேர்வு எழுதும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது! தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. பல்வேறு தடைகளைக் கடந்து தற்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிக்கை கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, ஆசிரியர் தேர்வு ...

சத்துணவு, அங்கன்வாடி, ரேஷன்கடை போன்ற பல திட்டங்களில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாகும்! நம்மைப் பார்த்து மற்ற மாநிலங்கள்  பின்பற்றின.  தற்போது நீட் தேர்வு எதிர்ப்பிலும் இந்தியாவிற்கே முன்னோடி முன்னோடியாக உள்ளது! ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு எதிர்த்ததை போல, தொழிலாளர் விரோத சட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது தமிழக தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கட்டடத் தொழிலாளர், ஆட்டோ தொழிலாளர், விவசாயத் தொழிலாளர், வீட்டுவேலை   செய்பவர்களின் நலனுக்காக   அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளைப்  ...