தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே செல்கிறது! மின்வாரியத்திற்கு நாளுக்கு நாள் கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது. மின் உற்பத்தி மின் விநியோகம் மேன்மேலும் தனியார்மயமாகிறது. இவை குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தியிடம் ஒரு நேர்காணல்; சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தியது பல விவாதங்களை உருவாக்கியுள்ளது அது மட்டும் இல்லாமல் பலருக்கு வைப்புத் தொகை கட்டணமும் வசூலித்து உள்ளனர். உண்மையில் என்ன நடக்கிறது மின்சார துறையில் ? இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் ...
ஜவுளித் தொழில் வரலாறு காணாத நெருக்கடியில் திணறுகிறது! பஞ்சு,நூல் விலைகள் ஆகாயத்தில்! நெசவாளர்கள் வாழ்வோ பாதாளத்தில்! கோடிக்கணக்கானோர்களுக்கு வாழ்வாதாரமான பருத்தி பஞ்சு, நூலின் விலையை தீர்மானிப்பது வர்த்தகச் சூதாடிகளா..? தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரும் தொழில் ஜவுளித் தொழிலாகும்! சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளன! இதில் விசைத்தறியால் 10.19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கைத்தறியால் 3.20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் நூற்பாலைகள், பவர்லூம்கள், கூட்டுறவு சொசைட்டிகள் என பல ...