தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக முயற்சித்து வரும் தமிழக கல்வியாளர்களுக்காக இந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றோம். கடந்த ஐந்து வருடங்களாக தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்த்து வருகின்றோம். தேசிய கல்விக் கொள்கை அதன் செயல்பாடுகளும் திட்டங்களும் தெளிவாக அரசின் அறிவிப்புகளாக வெளிவந்துவிட்டன. ஆகையால் ஒவ்வொரு கல்வியாளரும் அதனைப் புரிந்து அதனை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? அதனால் ஏற்படும் பாதகங்கள் என்ன என்பது பற்றித் புரிந்துள்ளோம் . கடந்த சில வருடங்களாக அரசின் தவறான கொள்கை முடிவினால் பல்கலைக்கழகங்கள் சீரழிந்து வருகின்றது. ...