கிரிப்டோ கரன்ஸி குறித்த அரசின் அணுகுமுறைகள் கருப்பு பண புழக்கத்தை கணிசமாக அதிகரிக்க எப்படி வழிவகுக்கும் என்பதையும், எளிய நடுத்தரப் பிரிவு மக்களை எப்படி நடுத்தெருவிற்கு இழுத்து வந்துவிடும் என்பதையும் சற்றே பார்ப்போம். ஒரு செயலை சரி-தவறு என்று சொல்வதற்குப் பல வருடங்கள் எடுத்து, இன்னமும் முடிவு எடுக்க முடியாமல், அல்லது எடுக்க விருப்பம் இல்லாமல் அந்த செயலை செய்பவர்களைப் பார்த்து உங்களுடைய செயலுக்குப் பணம் கொடுங்கள் என்று கேட்டால்? என்னவென்று சொல்வது. இதுதான் கிரிப்டோகரன்சி விஷயத்தில் நடந்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் ...
சுதந்திர இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்பட்டது? நேருவின் ஆளுமை எப்படிப்பட்டது? இந்திரா காந்தி செயல்பட்டவிதம், இந்திய அரசியல் கட்சிகளின் இயங்கு தன்மை, இந்தியாவை மற்றொரு மதவாத பாகிஸ்தானாக்க துடிக்கும் பாஜகவின் செயல்பாடுகள் என அலசுகிறார் சுனில் கில்நானி. சுதந்திர இந்தியாவின் ஐம்பது ஆண்டு வரலாற்றை, ஒரு புதிய கோணத்தில் அணுகியுள்ளார் சுனில் கில்நானி. தற்போது அசோகா பல்கலைக் கழகத்தின் அரசியல் வரலாற்றுத்துறை பேராசிரியராக உள்ளவரான சுனில் கில்நானி, லண்டன் கிங்ஸ் கல்லூரியின் இயக்குனராக இருந்தவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர் மற்றும் விமர்சகர். இந்த நூலை மேலோட்டமாக ...
‘எமக்குத் தொழில் கவிதை’ என்று தன்னுடைய தொழிலைப் பற்றிப் பிரகடனப்படுத்திக் கொண்ட பாரதி இதழியல் துறைக்குள் வந்தது தற்செயலாகத்தான். காசியிலிருந்து எட்டயபுரத்துக்குத் திரும்பிய பிறகு எட்டையபுர மன்னருக்குத் தினமும் பத்திரிகைகளைப் படித்து, அதிலுள்ள செய்திகளைப் படித்துச் சொல்லும் வேலை பார்த்து விட்டு, மதுரை, சேதுபதி பள்ளியில் தற்காலிகமாக மூன்று மாதங்கள் வேலை பார்த்து, அந்த வேலையும் முடிவுக்கு வந்தபோதுதான் அவருடைய 22ஆம் வயதில் சென்னையில் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. அதனால், சமகாலத்துடன் நெருக்கமான உறவு கொள்வதற்கான சூழ்நிலை உருவாகியது. இதழியல் ஊடகம் இப்போது பரபரப்பு என்கிற ஒரே ...
கே.எஸ்.கவின், மணலூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி காமராஜர்_அண்ணா கலைஞர்_எம்.ஜி.ஆர் கலைஞர்_ஜெயலலிதா என்ற ஒப்பீட்டு வரிசையில் ஸ்டாலின்_….? காமராஜர், அண்ணா இருவரும் சுயம்புவாக உருவான தலைவர்கள்! கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் தமிழக அரசியலை ஒன்மேன் ஷோவாக மாற்றியவர்கள்! கலைஞர், ஜெயலலிதா ஒருவருக்கொருவர் ஈகோவில் உச்ச நிலையைத் தொட்டவர்கள்! ஸ்டாலுனுக்கு ஈடு கொடுப்பதில் தான் தற்போது நான்கு முனை போட்டி நிலவுகிறது இ.பி.எஸ், ஒ.பி.எஸ், சசிகலா போதாது என்று அண்ணாமலையும் களத்தில் நிற்கிறார்! கட்சியில் அடுத்தகட்ட தலைவர்கள் அடையாளம் பெற்று எழுவதை எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. எம்.ஜி.ஆரை மீறி எழுந்து தன்னை ...
திடீரென்று அமேசான் நிறுவனத்தின் மீது ஆர்.எஸ்.எஸ் பாய்கிறதே..? ஏன் இந்த பாய்ச்சல்..? இதன் பின்னணி என்ன..? அமேசான் இந்தியாவில் மிக வெற்றிகரமாக இயங்கும் பிரதான நிறுவனமாக உள்ளது! இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளிலும் அமேசான் தான் முதலிடத்தில் உள்ளது! தற்போது அமேசான் முதல் முறையாக ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தாண்டி வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் முதலீடு செய்து வருகிறது. அமேசான் நிறுவனம் ஸ்மால்கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 40 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டுச் சுற்றில் முதலீடு செய்துள்ளது!அமேசான் இந்தியாவில் நேரடியாக ஒரு ...
விடுதலை போராட்டங்கள் குறித்து ஏராளமான புத்தகங்கள் படிதிருக்கிறோம். ஆனால் போராட்டங்கள்- பேச்சுவார்த்தை- தீர்வு எனும் முத்தன்மையை முதன்மையாக்கி அதில் பேச்சுவார்த்தை- தீர்வு எனும் பகுதிகளுக்கு அழுத்தம் தந்து வந்த புத்தகங்கள் மிகக்குறைவு. அப்படிப்பட்ட புத்தகத்தில் ஒன்று வி பி மேனனின் Transfer of Power in India – இந்தியாவில் அதிகார மாற்றம். நவீன இந்தியா தோன்ற ஆகச் சிறந்த காரியங்களை ஆற்றிய மேனன் விடுதலை இந்தியாவில் அதிக வெளிச்சம்படாத மனிதர். ’இனி அரசாங்கப் பணி ஏதுமில்லை’ என ஒதுங்கிய காலத்தில் வி பி ...
சுதந்திர தின சூழலில் பல எண்ண ஓட்டங்கள் மின்னலாய் தோன்றுகின்றன.கடந்து வந்த பாதையும், எதிர்கொண்ட சோதனைகளும் நம்கண்முன் விரிகின்றன. காலனி ஆதிக்கத்தை வீழ்த்தி விடுதலை பெற்ற நாடுகளில் இந்தியா ஒரு தனித்தன்மையுடன் திகழ்ந்தது. எண்ணற்ற கனவுகளுடன், நமது விதியை நாமே முடிவு செய்யும் அதிகாரத்தை பெற்ற நாம் , நமது விடுதலை இயக்கத்தின் குறிக்கோள்களை அடைய செம்மையான ஒரு முறைமையை ஏற்படுத்தவும் சூளுரைத்தோம். அதில் பெருமளவு வெற்றியும் கண்டோம். காந்தி, நேரு, பட்டேல், நேத்தாஜி, அபுல் கலாம் ஆசாத் மற்றும் அம்பேத்கர் போன்ற மாபெரும் ஆளுமைகள் ...
யானைகளை யாருக்குத் தான் பிடிக்காது. அதன் கம்பீரத்தை பார்க்கும் போதே ஏதோ ஒரு உற்சாக ஊற்று நமக்குள் தோன்றுகிறது! அது நடக்கும் நடையழகோ வித்தியாசமானது. அதன் மிகச் சிறிய கண்கள், பெரிய காதுகள், நீண்ட தும்பிக்கை..யாவும் பரவசம் தரக் கூடியவை! வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. யானை முகம் கொண்ட கடவுளை ஆண்டு தோறும் வழிபடும் நாம் யானையை பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையை கொண்டிருக்கிறோம்…? ஒரு பக்கம் யானையின் தலைதான் கடவுள். மற்றொரு பக்கம் உயிருள்ள அதே யானையை பிச்சை ...
இந்தியாவை 100 பகுதிகளாகப் பிரித்து, அவையாவும் டில்லியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வால்கர் வலியுறுத்தி வந்தார்! மாநில அரசுகளே இருக்கக்கூடாது என சொல்லி வந்தார். ஆர் எஸ் எஸ்ஸும், அதன் அரசியல் முகமான பாஜகவும் கூட்டாட்சி முறைக்கும், மொழிவழி மாநிலங்களுக்கும் எதிரானவை ! மாநில கலாச்சார ,மொழி அடையாளங்களை, அவற்றின் தனித்தன்மைகளை அழித்து ” ஒரே நாடு, ஒரே மக்கள்” என கோஷமிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க வேண்டும் என்பது தான் அவர்கள் நோக்கம் ! தமிழ்நாட்டை ...
உண்மைகளை நீண்ட காலம் உறங்க வைக்க முடியாது! அதிகார பலத்தால் பொய்களை நிலைத்திருக்கச் செய்யவும் முடியாது என்பது மீண்டும் ரபேல் விமான ஊழல்கள் பிரான்சில் தோண்டி எடுக்கபடுவதில் இருந்து உணரமுடிகிறது. ஜீலை 2 ல் பிரான்ஸ் அரசு ஒரு நீதி விசாரணையை தொடங்கியுள்ளது. மோடி அரசின் முகத் திரையை கிழிக்கும் இந்த ஊழல் விவகாரத்தை மீடியாக்கள் ஏன் பேச தயங்குகின்றன,,? சர்சைக்குள்ளான 5,85,000 கோடி ரூபாய் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பணப் பரிவர்த்தனை, சாதகமாக நடந்து கொள்ளுதல் போன்ற ...