உலகம் முழுவதுமுள்ள அரசுகளையும், மக்களையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய நோய் – கொரொனா. கொரானா தாக்கத்தாலும், அதன் மீது உருவான மிகை அச்சத்தாலும் எண்ணற்ற மக்கள் செத்து மடிந்தனர். அலோபதியில் முறையான சிகிச்சை கண்டுபிடிக்கப்படாமலேயே கொரொனா கட்டுக்குள் வந்து விட்டதாக உலக அரசுகள் அறிவிக்கத் தொடங்கின. மரபு வழி மருத்துவங்களில் சிகிச்சைக்கான சாத்தியங்கள் இருந்தும் அவற்றுக்கான முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதெல்லாம் பழைய கதை. கொரோனா அச்சம் பரவிய போதே மருந்து நிறுவனங்களும், அரசுகளும் தடுப்பூசி என்ற சொல்லை உச்சரிக்கத் துவங்கின. படிப்படியாக நோய்த்தாக்கம் ...