சிறு தீப்பொறியாலும் பெருங்காட்டை அழிக்க முடியும் என்பதற்கேற்ப சிற்றிதழ் என்றாலும், அறச் சீற்றத்தின் வீச்சு காரணமாக அறம் இணைய இதழின் வெளிப்பாடுகள் பரந்துபட்ட மக்களிடமும், கருத்து சென்று சேர வேண்டிய உரிய தளங்களிலும் சென்று சேர்ந்த வண்ணம் தான் உள்ளது! தேர்தல் காலங்களில் நாம் எழுதிய கட்டுரைகள் பிரபல பத்திரிகைகளிலும்,சிறு பத்திரிகைகளிலும் எடுத்து பிரசுரம் செய்யப்பட்டன. வாட்ஸ் அப்களில் பெரிய அளவு வலம் வந்ததன. மொத்தத்தில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின. அறம் தன் வாசகர்களோடு இணைந்து அதன் சமூகக் கடமையை சிறப்பாக செய்தது! ...