22 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை தன் வரலாறு என சுருக்கி வகைப் படுத்த இயலாது. சட்டம், நீதிமன்றம், வழக்குரைஞர்களின் தொழில், பல முக்கிய வழக்குகள், தீர்ப்புகள்.. இவற்றை  உண்மைச் சம்பவங்களுடன் இணைத்துச் சொல்லும் போது, அது சமகால சமூக, அரசியல் வரலாறாக ஆகி விடுகிறது! ஜெய்பீம் திரைப்பட வெற்றியைத் தொடந்து, வெகுமக்களின் அன்பிற்குரியவராக கே.சந்துரு மாறிவிட்டார்.  மாணவர் சங்கத் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்,வழக்கறிஞர், நீதிபதி என பல நிலைகளில் இவர்  பணியாற்றியுள்ளார்.  வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ...

மாணவி லாவண்யா விஷமருந்தி  உயிர் இழந்தது சம்மந்தமான குற்றப்புலனாய்வை தமிழக காவல்துறையிடமிருந்து , மத்திய  புலனாய்வுத்துறைக்கு (CBI) மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பை பற்றி ஆதியோடந்தமாக அலசி விமர்சிக்கிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்! மாணவி லாவண்யா, தஞ்சை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில். 8 -ஆம் வகுப்பிலிருந்து ஐந்து ஆண்டுகள் அப்பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்தார். ஜனவரி 9 அன்று மாலை அவர் விடுதியில் வாந்தி எடுத்ததற்கு ஆரம்ப சிக்கிச்சை தந்த விடுதி நிர்வாகத்தினர், மாணவியின் தந்தைக்கு தகவல் அளித்து மாணவியை அழைத்து ...

மாரிதாஸ் விவகாரத்தில் அவசரகதியில் எப்.ஐ.ஆரையே நீக்கி, வழக்கை ரத்து செய்து நீதிபதி நடந்து கொண்டது விசித்திரமானது. இந்த வழக்கில் அரசு மேல் முறையீடு செய்யலாம். அத்துடன் கொரானாவையும், இஸ்லாமியர்களையும் சம்பந்தப்படுத்திய வழக்கில் அவரை கடுமையாக தண்டிக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக குற்றவியல் வழக்குகள் உட்பட எந்த வழக்குகளும் இந்த மின்னல் வேகத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. புலன் விசாரணைக்கு தடை அளிக்கப்பட்டாலே, சிறையில் இருப்பவர் வெளியில் வந்துவிடுவார். காவல்துறை குற்றத்தை புலன் விசாரணை  செய்வதற்கான முதல்படியே முதல் தகவல் அறிக்கைதான்,. கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு ...

கொஞ்சம் கூட கூச்ச, நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு இன்று தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு சங்காராச்சாரியார் வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்! நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா ...

‘மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கு’  என்று சுவரில் எழுதி வைத்து இருப்பதை   சிறுவயதில்  பள்ளிக்கு நடந்து போகும்போது பார்த்து இருக்கிறேன். அதன் அருகில் பெரியார் படத்தை வரைந்திருப்பார்கள்.  ‘மண்டல்’ என்பது ஒரு  பெயர் என்பது உயர்நிலைப்பள்ளி மாணவர்களாகிய எங்களுக்கு அப்போது தெரியாது. வி்.பி. சிங் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் மண்டல் என்ற பெயர் இல்லாத செய்திப் பத்திரிகைகளைக்  காண முடியாது. 2021 க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி ...

பல நேரங்களில் இவரது தீர்ப்பை படிக்கும் போது நீதித்துறையின் மீது மட்டுமல்லாது, இந்த சமூகத்தின் மீதே ஒரு நம்பிக்கை பிறக்கும்! ”எளிய மக்களின் ஏக்கங்களையும், நோக்கங்களையும் உள் வாங்கி அவர்களின் மனசாட்சியாக இவர் வெளிப்படுகிறாரே..!” என்று வியந்த  நிகழ்வுகள் பற்பல! நீதித் துறையில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை ஒரு சிறிதும் புரிந்து கொள்ளாமல் காவல்துறைக்கு ஆதரவாகவும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு சொல்லக் கூடியவர்களை பார்த்தும், கேட்டும், வெறுப்பும், விரக்தியும் அடைந்த பெருந்திரளான மக்களின் மாற்று எதிர்பார்ப்பாக நீதிபதி என்.கிருபாகரன் வெளிப்பட்டார். சில நீதிபதிகள் சமூகத்தில் இருந்து ...

நாட்டுமக்களின் அரிய பாதுகாவலனாக, அரவணைக்கும் ரட்சகனாகத் திகழ வேண்டிய உச்ச நீதிமன்றம் சமீப காலமாக அதன் கடமையில் இருந்து நழுவுகிறதோ என்ற சந்தேகம் பெரும்பாலோர் மனதில் தோன்றியுள்ள சூழலில், உச்சநீதி மன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அவர்கள், ”பெரும்பான்மை மனப்போக்கின் அடிப்படையில் குற்றசெயல்களை பிரித்துப் பார்ப்பதும், குற்றவியல் நடைமுறைகளை எடுத்துச்செல்வதும் நீதியை நிலை நாட்டும் செயலல்ல! மாறாக, அவை நீதியையும் சமத்துவத்தையும் குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.” என்று பேசியுள்ளது சற்று ஆறுதல் தருகிறது! சமீபகாலமாக நாட்டின் நீதி பரிபாலன அமைப்புகள், மக்களை பாதித்த ...

ஜூலை 26ஆம் தேதியுடன் ஏழு மாதங்களை நிறைவு செய்கிறது, மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் கோரியும்,டெல்லி நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம்! யாருக்கும் தெரியாமல் ஊரடங்கிய நேரத்தில் 2020 ஜூன் 6ஆம் தேதி, மூன்று  அவசரச் சட்டங்களாகப் கொண்டுவரப்பட்டு,செப்டம்பர் 3வது வாரத்தில்,அனைத்து சனநாயக விதிகளையும், மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, நாடாளுமன்றத்தில் சட்டங்களாக இவை நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவசர அவசரமாக கொண்டுவருவதால் பெரியளவிற்கு எதிர்ப்பு  இருக்காது,அப்படியே இருந்தாலும் சமாளித்து விடலாம்’ என்ற மூடநம்பிக்கையில் ஒன்றிய அரசு,முன் யோசனையில்லாமல் ...

‘’ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு கமிஷன் போட்டால் சரியாயிடுமா..?’’ ‘’இந்த நாட்டுல எவ்வளவு கமிஷன்கள் போட்டு இருக்காங்க..! அந்த கமிஷன் அறிக்கைகளைக் கூட வெளியிடாமால் அரசாங்கம் வாங்கி வைத்துக் கொள்வதெல்லாம் நடந்திருக்குதே..!’’ ‘’கமிஷன் அறிக்கையை வாங்கி மத்திய அரசுக்கு அனுப்பத் தான் முடியும். அதை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாதே!’’ ‘’அப்ப என்ன சார் இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருக்குமா..?’’ இப்படியான சந்தேகங்கள் பல தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டு வருகின்றன! மேற்படி சந்தேகங்களை எழுப்புவதற்கான கடந்த கால கசப்பான அனுபவங்கள் பல ...

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் புதிதல்ல, எத்தனையோ முறை ஆட்சியாளர்கள் விமர்சனங்களை தாங்க முடியாமல் பத்திரிகையாளர்களை கைது செய்துள்ளனர். ஆனால்,அர்னாப் கைதான போது தான் பத்திரிகை சுதந்திரம் குறித்த அக்கரை  உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பொத்துக் கொண்டு வருகிறது! அடடா என்னாமா துடிச்சு போயிட்டாங்க. அர்னாபிற்கு நீதிமன்றம்  வெறும் 14 நாட்கள் தான் சிறை என தீர்ப்பளித்தது. அதுவும் ஜாமீன் வேண்டுமென்றால், கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றது. ஆனால், அர்னாப் சாதரணமானவரா? ’’விட்டேனா பார்’’ என உச்ச நீதிமன்றத்திற்கே சென்று விட்டார். உச்ச ...