காந்தியைப் பற்றிய நேரடியான அவரது அனுபவங்களை கேட்க மாத்திரமல்ல, காந்தியின் கடைசி நிமிடங்களை அறிந்து கொள்ளும் ஆவலில் கல்யாணத்தை சந்திக்க விரும்பினேன். நான் பத்திரிகையாளன் என்றதும், ”என்னை பேட்டி எடுத்தால் கட்டணம் தர வேண்டும்’’ என்றார். ஒத்துக் கொண்டதால் தான் அப்பாயிண்மெண்ட் தந்தார். நண்பர் பீட்டர் துரைராஜ் அவர்களையும் அழைத்துக் கொண்டு, பாரதிதாசன் சாலையில் எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி எதிரில் உள்ள அப்பார்ட்மெண்டில் அவரை சந்தித்தேன். ’’நான் எந்த பத்திரிகை சார்பாகவும் அவரை பேட்டி எடுக்கவில்லை! காந்தியுடனான அவரது அனுபவங்களை நேரடியாக கேட்கும் தனிப்பட்ட ஆவலுக்காக ...