கார்ப்பரேட்களின் பேராசைக்காக குமரி மாவட்ட இயற்கை வளம் சூறையாடப்பட்டு வருகிறது..! முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. அரசின் கதைப்பாடோ வளர்ச்சி என்கிறது! மக்களின் நிலைப்பாடோ அதிர்ச்சியாகியுள்ளது. இதோ சுற்றுச் சூழல் குறித்த ஒரு தெளிவான புரிதல்; தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனத்துடன் கைகோர்த்து (indian Rare Earths Limited – IREL) கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு போன்ற பல்வேறு பகுதிகளில் 1144.06 ஹெக்டேர் (2,827 ஏக்கர்) நிலப்பரப்பில் மோனோசைட், ...