மீண்டும் கொரோனாவா? மிரள வேண்டாம்! எல்லோரும் பயப்படுமளவு ஊரெங்கும் சளித்தொல்லை, ஜலதோஷம், காய்ச்சல் என வாட்டியெடுத்து பாடாய்ப் படுத்துகிறது. இயற்கை மருத்துவம் என்றென்றைக்கும் நம்மை காக்கும் என்ற உறுதியுடன் சில மருத்துவ ஆலோசனைகளை பகிர்கிறேன். தற்போது இந்த கட்டுரையில் நான் தரும் ஆலோசனைகளே கொரானா காலத்தில் பலரை மீட்டுக் கொண்டு வந்தது! ஆகையால், இது யாவருக்கும் பலனளிக்கும்! இயற்கைச் சூழலை நாம் ரொம்பவே கெடுத்து வைத்துள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஊர் உலகமெங்கும் பருவமழை அது அதற்குரிய காலங்களில் பெய்வதில்லை. ஆனபோதிலும் வரலாறு காணாத ...

இயற்கையாகவே நோய் எதிர்ப்புத் திறன் உள்ள சிறார்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் அறவே இல்லை. வலிந்து தடுப்பூசியை திணிப்பது நீண்டகால நோக்கில் பல பாதகமான விளைவுகளை தரும் என சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் எதிர்க்கிறார்கள்! அதையும் மீறி ஏன் இந்த திணிப்பு? கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்தும், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்தும் தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு ஆலோசனை மேற்கொண்டது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் ...

”தடுப்பூசியை விருப்பபட்டவர்கள் போட்டுக் கொள்ளட்டும். வேண்டாம் என்பவர்களை முட்டாள்களாகவோ,முரடர்களாகவோ நினைக்காதீர்கள்!” என்றால், ”நாங்கள் போட்டோம், எந்த பாதிப்புகளும் இல்லாமல் தானே இருக்கிறோம். நீங்கள் மட்டும் மறுத்தால் எப்படி?” என கேட்கிறார்கள்! ”சபாஷ் , உங்கள் பாணியிலேயே இதற்கு பதில் சொன்னால் ஏற்பீர்களா..?” பார்ப்போம். உலகில் 750 கோடி மக்கள் வாழ்கிறார்கள்! அவர்களில் இது வரை கொரோனாவில் 45,66,000 பேர் தான் இறந்துள்ளனர். பாதிப்பு வந்தவர்களில் குணமடைந்தவர்கள் 19,71,00,000. ஆக மிகக் குறைவானவர்கள் இறக்கக் கூடிய – பெரும்பாலானவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீளக் ...

இது கொரானா தடுப்பூசிக்கு எதிரான பதிவல்ல. அவரவர்கள் தங்கள் சொந்த பட்டறிவையும், பகுத்தறிவையும் சார்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால்,சில நிதர்சனங்களை புறம் தள்ளாதீர்கள் என சொல்வதற்காகவே இதை எழுதுகிறேன். கே.வி.ஆனந்த் மிக சமீபத்தில் தான் கொரானா தடுப்பூசி முதல் டோஸ் போட்டார்! அது போடும் வரை உற்சாகமாக இருந்தவர் போட்ட பிறகு உடல் நலன் குன்றியுள்ளார். இதற்கு முன்பில்லாத வகையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை சென்று சோதித்ததில் அவருக்கு கொரானா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரத்த உறைதல் ஏற்பட்டதா..? எனத் தெரியவில்லை. ...

கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டையே ஆட்டம் காண வைத்துவிட்டது என்று பிரதமர் மோடியே வேதனைப்பட்டு சொல்லும் அளவுக்கு நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. கொரோனா வின் இரண்டாவது அலை எவ்வளவு கொடூரமானது என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இந்நாட்டை பார்த்து மற்ற நாடுகள் எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்துமே இந்திய பயணிகள் ...