பகுதி -2 தமிழக கோவில் சொத்துகளை அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும்,சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொத்தாம்பொதுவாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தமிழக அற நிலையத்துறை ஏற்படுத்தபட்ட பிறகு தான் கோவில் சொத்துகள் பறிபோவது ஒரளவேனும் தடுக்கப்பட்டது. இல்லையெனில்,முழுவதையும் தனியார்கள் எப்போதோ ’ஸ்வாகா’ செய்திருப்பார்கள்…என்று சிலர் வாதம் வைக்கிறார்கள்! உண்மையில் கோவில் சொத்துகளை யார்,யாரெல்லாம் அபகரித்துக் கொண்டுள்ளனர், யாரெல்லாம்  சூறையாடிவருகின்றனர் என்று இந்த கட்டுரையில் தெளிவாக பார்த்துவிடலாம்! உதாரணத்திற்கு சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர் குடும்பங்கள் நீண்ட காலமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த கோயிலுக்கு சொந்தமாக பல ஆயிரம் ...