எவ்வளவு பெரிய அவமானம்! கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அவலம், கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமை இவற்றின் விளைவாக, ”குற்றவுணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்…” என ஸ்டாலின் சொன்னது ஒரு நெகிழ்ச்சியைத் தந்தாலும், உள்ளாட்சி தேர்தலை திமுக தலைமை அணுகிய விதத்தில் தொடங்குகிறது எல்லாமே! உள்ளாட்சி அமைப்புகள் அவற்றுக்குரிய பூரண சுதந்திரத்துடன் இயங்க அனுமதிப்பதே ஒரு முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை என்றாலும், அதை நடைமுறைப்படுத்த இன்றைய கட்சித் தலைமைகளின் சர்வாதிகார கண்ணோட்டங்கள் ஒத்துழைப்பதில்லை. ‘அடிமட்டம் ...

குடியரசுதின சிறப்புக் கட்டுரை சங்க காலத்திலேயே வெளி நாட்டில் வணிகம் செய்ய பாய்மரக் கப்பலில் பயணித்த பாரம்பரியம் தமிழர்களுக்குண்டு. சோழர் காலத்திலேயே பிரம்மாண்ட கப்பற்படைகள் இருந்தன. இடைகாலத்தில் நாம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க வ.உ.சி கொண்ட பெரு முயற்சிகளும், பெருந்துயரங்களும் காவியத் தன்மை கொண்டவை! ஆங்கிலேயருக்கு எதிராக, அழிந்து கொண்டிருந்த இந்திய கடல் போக்குவரத்து தொழிலுக்கு  புத்துயிர் அளித்தவர். இந்திய கடல்சார் வர்த்தகம் இழந்த புகழினை மீட்டெடுக்க,  வ.உ.சி. ஆற்றிய சேவை அவரது சம காலத்திலும், முன்னெப்போதும் நிகழாத மாபெரும் முன்னெடுப்பு! பிரிட்டீஷ் இந்திய ...

ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தும் எளிமை மாறாதவர்! எத்தனையோ நன்மைகளை கரிசல் மண்ணுக்கும், மக்களுக்கும் பெற்றுத் தந்தவர்! சோ.அழகர்சாமியின் வாழ்க்கையோடு, கோவில்பட்டியின் வரலாற்றையும் சொல்கிறார் காசி விஸ்வநாதன். கோவில்பட்டி என்றதும் நினைவுக்கு வருவது, அங்கு நடைபெறும்  பாரதி விழாதான் . அங்கு பல ஆண்டுகளாக  பாரதி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அடித்தளமிட்டவர் சோ.அழகர்சாமி. ஐந்து முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ள இவர், எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கூட்டுறவு அமைப்புகளை செயலூக்கத்துடன் உருவாக்கியவர். விவசாயிகள் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.  சோ.அழகர்சாமியைப் பற்றிய ...

ஒரு மாணவத் தலைவரான கேப்ரியல் போரிக் மாபெரும் சர்வாதிகாரியும், அமெரிக்க ஆதரவு பெற்றவருமான அன்டனியோ காஸ்ட்டை தோற்கடித்தார். மக்கள் சக்தி ஒருங்கிணைந்தால் பணபலம், அதிகாரபலம் அத்தனையும் தூள்தூளாகும் என சிலி மக்கள் நிருபித்துள்ளனர்! இழுபறியாகவே முடியும் , என்று அனைவராலும் ஆருடம் கூறப்பட்ட சிலி நாட்டு அதிபர் தேர்தலில் அனவரது எதிர்பார்ப்புகளையும் முறியடித்து இடதுசாரி இயக்கத்தை சார்ந்த  35 வயதான இளைஞர் கேப்ரியல் போரிக் மாபெரும் வெற்றியடைந்துள்ளார். கம்யூனிஸ்ட் என்று வலதுசாரி அரசியல்வாதிகளால் முத்திரை குத்தப்பட்ட மாணவர் தலைவர் கேப்ரியல் போரிக் இடதுசாரி சிந்தனை ...

காமராஜர் காலத்து மாணவரணித் தளபதிகளுக்கு தலைமை தாங்கியவர், கம்பீரமான பேச்சாளர், தமிழ் இலக்கியங்களில் ஆழங்கால் புலமை கொண்டவர், தீவிர புத்தக வாசிப்பாளர், சிறந்த  சோசலிஸ்ட், திராவிட இயக்கத்திலும், இடதுசாரி இயக்கத்திலும் நெருக்கமான நண்பர்களைக் கொண்டவர், நேர்மையான வழக்கறிஞர், எளியோருக்காக பணம் வாங்காமல் ஆஜரானவர்.., பெரும் ஆளுமையாக இருந்தும் உரிய அங்கீகாரம் பெறாதவர்…என பலவாறாக சொல்லிக் கொண்டே போகலாம் நண்பர் தஞ்சை ராமமூர்த்தியைக் குறித்து! தஞ்சை இராமமூர்த்தி மறைந்தார் என்ற செய்தி இடியாய் இறங்கி என்னை வந்து தாக்கியது ! தஞ்சை இராமமூர்த்தி  மறைந்தார் ! ...

காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத ஒரு இக்கட்டில் இருக்கிறது என்பது உண்மைதான்! அந்த இக்கட்டில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்..? குலாம் நபி ஆசாத்தும் கபிள்சிபலும் யாருக்காக பேசுகிறார்கள்..? அவர்களின் நோக்கம் என்ன..? பஞ்சாபில் நடக்கும் சம்பவங்கள் காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரஸ் ஆதரவாளர்களையும் உலுக்கி வருகின்றன. காங்கிரஸ்        பலமாக இருக்கும் ஒரு சில மாநிலங்களில் பஞ்சாப் குறிப்பிடதக்கது! அங்கு காங்கிரஸ் பலவீனப்படுவதும், அப்படி பலவீனமடைய காங்கிரஸின் தேசிய தலைமையே காரணமாகிவிட்டதோ என்ற உணர்வும் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது! அமரீந்தர் சிங் போன்ற ...

வன்முறைக்கு அஞ்சாத மனோபாவம்! பஞ்சமா பாதகமென்றாலும்,பயப்படாமல் செய்யும் துணிச்சல்! தெருச் சண்டைக்கு முஸ்தீபு காட்டும் அஞ்சா நெஞ்சம்! திராவிட இயக்கங்களின் மீதான தீராத வன்மம்! இந்த தகுதிகள் போதாதா தமிழக பாஜக தலைவராக அண்ணமலை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு? ஆக, இதைத் தான் ஆகப் பெரிய தகுதியாக பார்க்கிறது பாஜகவின் தேசியத் தலைமை! தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது என்பது பாஜகவின் விரக்தி மன நிலையின் விளைவுக்கு ஒரு அத்தாட்சியாகும்! எதையாவது செய்தாக வேண்டும் என்ற தவிப்பில் எல்.முருகன் என்ற தலித்தை கட்சித் தலைவராக்கி அதன் ...

கருணாநிதி இயல்பானவர், எளிதில் அணுக முடிந்தவர், ஜனநாயகத் தன்மை கொண்டவர்! 1985 தொடங்கி அவரை பின் தொடரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது! எம்.ஜி.ஆர் ஆட்சியில் கலைஞர் தலைமையில் எதிர்கட்சிகள் கலந்து கொண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது மெரீனா சீரணி அரங்கில்! அதில் நல்லக் கண்ணுவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய  அணியின் தலைவராக நல்லக்கண்ணு இருந்தார்! கலைஞர் பொதுக் கூட்டத்தில் நல்லக்கண்ணு பேசிய புகைப்படம் முதன்முதலாக நான் எடுத்து ஜனசக்தியின் முதல் பக்கத்தில் பிரசுரமானது! அதற்குப் பிறகு ...

”யார் வல்லவன், நீயா? நானா?” என்ற போட்டி அதிமுகவில் வலுக்கத் தொடங்கிவிட்டது! ஆட்சி அதிகாரம் என்ற புதையலை பங்கிட்டுக் கொள்வதற்காகவும், கிடைத்தற்கரிய ஆட்சி அதிகார கட்டிலை சண்டையிட்டு இழந்துவிடக் கூடாது என்றும் தான் இருவரும் இத்தனை நாட்கள் ஒன்றுபட்டிருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டினார்கள்! தற்போது யார் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது என்பதில் இருவருக்கும் லடாய் ஆரம்பித்துவிட்டது. ”ஆட்சித் தலைவராக இருந்து தேர்தலை ஒரு போர் வீரன் போல முன்னனிலையில் நின்று அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்தது நான் தான்! இன்று 65 தொகுதிகள் கிடைத்தது ...

பொதுத்துறை நிறுவனங்களை பொலிகடாவாக்கி வரும் மத்திய பாஜக அரசு, அவற்றுக்கு இறுதி கட்ட மரண அடி கொடுக்க, மல்லிகா சீனிவாசனை பொதுத் துறை நிறுவன வாரியத் தலைவராக நியமித்துள்ளது! டி.வி.எஸ்.சுந்தரம் அய்யங்கார் குடும்பத்தின் மல்லிகா, இந்தியாவின் மிகப் பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனத்தின் (TAFE) தலைவராக உள்ளார். மல்லிகாவை பொதுத் துறை வாரியங்களின் தலைவராக நியமித்ததன் மூலம் பல லட்சம் கோடி முதலீடுகள், 12.34 லட்சம் தொழிலாளர்கள் உள்ள கொண்ட – சேவையை லட்சியமாக – இந்திய பொதுத் துறை நிறுவனங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது ...