குழப்பமோ குழப்பம்! ஜீலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் என முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ளது! அன்றைய தினம் தான் அறிஞர் அண்ணா மதராஸ் என்ற பெயரில் இருந்த மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார்! அதனால், அண்ணா பெயர் சூட்டிய நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாட அரசாணை பிறப்பிக்க போவதாக சொல்லப்பட்டுள்ளது! மொழிவழியாக மாநிலங்கள் உருவாக்குவதற்காக ம.பொ.சிவஞானம், நேசமணி, தேசிய விநாயகம் பிள்ளை ஆகியோர் பல போராட்டங்களை நடத்தி, பல மனித உயிர்கள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகினர்! தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தே ...