அரசியல் ஈடுபாடு என்பது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆழ் மன உந்துதலில் இருந்து வந்தால்..அப்படிப்பட்டவர் அதை ஈடேற்றுவதற்கான அதிகாரத்தை பெறுவதற்கு தனக்கான சகாக்களை சரியாக அடையாளம் கண்டு அரவணைத்துக் கொள்வார்! அப்படி இல்லை என்றால், அவர் அன்னியர்களை நம்பி தன்னையே அழிவுக்கு உள்ளாக்கிக் கொள்வார்! சமீபகாலமாக தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என்ற புதிய தொழில் ஒன்று உருவாகி அரசியல் தலைவர்களை ஆட்டுவித்து வருகிறது! 2014 ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் என்பவர், அன்றைய பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர் மோடியை பிரமோட் ...