டாஸ்மாக் என்பது அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை மட்டுமல்ல, நூதனக் கொலை! மது என்ற பெயரில் மெல்லக் கொல்லும் விஷச் சரக்கு! பத்து ரூபாய் சரக்கை நூறு ரூபாய்க்கு விற்பது போதாது என்று இன்னும் விலையேற்றுவதா? மதுவின் உற்பத்திக்கும், விற்பனை விலைக்கும் நியாயம் வேண்டாமா? உலகத்திலேயே இரக்கமற்ற முறையில் செய்யப்படும் வியாபாரங்களில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்த்தை தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் விற்னைக்கு தரலாம்! ஒரு பொருளை உற்பத்தி விலைக்கு மேல் எவ்வளவு விற்கலாம் என்பதற்கு ஒரு குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் ...

இப்படி ஒரு கடைந்தெடுத்த பொய்யை எத்தனை நாள் பரப்புவார்கள்…? யாருக்கெல்லாம் வருமானம், யாருக்கெல்லாம் இழப்பு என விவாதிக்கலாமா..? பலனடைவது யார், பாதிக்கப்படுவது யார் எனப் பார்க்கலாமா…? மது அரசியலுக்கு பின்னுள்ள மர்மங்கள் விலகுமா..? பதவி ஏற்றது முதல் ஆட்சி மீது மதிப்பும், மரியாதையும் ஏற்படத்தக்க நிறைய அணுகுமுறைகளை பார்க்கமுடிகிறது! நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இறையன்பு, உதய சந்திரன் ஆகியோருக்கு முக்கியத்துவம் தந்தது, அறிவும், திறமையும், துணிச்சலும் ஒருங்கே பெற்ற அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மா.சுப்பிரமணியம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு..போன்றோரை அமைச்சர்கள் ...