நலம் தரும் பாரம்பரிய இயற்கை மருத்துவம் – 1 இன்றைய சூழலில் நாம் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறோம்? நம் முன்னோர் `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் உணவை தேர்வு செய்தனர். ஆனால், இன்றைக்கு நாம் உணவில் நிறைய தவறு செய்கிறோம், நோயை வலிந்து பெறுகிறோம். பாரம்பரிய உணவு பழக்கங்களையெல்லாம் விட்டுவிட்டு வெகுதூரம் வந்துவிட்டதால், புதுப்புது நோய்களில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து எப்படி விடுபடலாம்? காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை நாம் உண்ணக்கூடிய உணவுகளை ...

பாஜக அரசு புதிதாக யோகா கல்வியை உருவாக்கி, அதை பள்ளிக் கல்வி தொடங்கி மருத்துவக் கல்வி வரை கொண்டு வந்துள்ளனர்! நல்லது தான்! ஆனால், இதற்குள் இந்துத்துவ சித்தாந்ததை எப்படியெல்லாம் நுட்பமாக நுழைக்கின்றனர்  என்பது தான் திகைப்பூட்டுகிறது! இந்தியா முழுமைக்கும் பள்ளிக் கல்வி முதல் உயர் மருத்துவக் கல்வி வரை தங்களது சித்தாந்தங்களை மறைமுகமாக கொண்டு செல்லும்  முன்னத்தி ஏர் ஆக  இந்த யோகா கல்வியை துல்லியமாக வடிவமைத்தது தான் அவர்களின் மாஸ்டர் பிளானாகும்! இதை சற்று விரிவாக பார்ப்போம்; வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ...

கொள்ளை லாபம், மனித நேயம் இல்லாத மருத்துவம், செயற்கை தட்டுப்பாடு, ஆகியவற்றால் இந்திய மருத்துவத் துறை திணறுகிறது! மக்கள் உயிர்காக்கும் விவகாரத்தில் அரசு முற்றிலும் தனியாரை சார்ந்து நிற்கும் அவல நிலையில் உள்ளது! மக்களின் உயிர்காக்கும் மருந்து,மாத்திரைகள் தயாரிக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை செயல் இழக்க செய்ததன் விளைவை நாடு இன்று சந்திக்கிறது. கொரானா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளாகட்டும், கொரானா தடுப்பூசிக்கான மருந்துகளாகட்டும் தனியார் வைத்ததே விலை என்றாகிவிட்டது. கோஷில்டு மருந்தை மத்திய அரசுக்கு ரூ 150 , மாநில அரசுக்கு ரூ 600 ...