என்னுடன் படித்த சிறந்த ஒவியரான நண்பன் மெனுவேல் இது நாள் வரை என்ன ஆனான் என்பதே தெரியாமல் கவலையோடு இருந்தேன்! ஆனால், அவன் சற்றே மன நிலை பிறழ்ந்த நிலையில், ஏழ்மையில் வாழ்ந்தாலும், உயிரோடு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்பதே ஆறுதல் அளித்தது! நடிகரும், ஓவியக் கலைஞருமான சிவகுமார் கோவை மாவட்டம் சூளுர் அருகேயுள்ள சின்னஞ் சிறு கிராமமான காசிகவுண்டன் புதூரில் பிறந்து வளர்ந்து இன்று நாடறிந்த பிரபலமாக இருந்த போதிலும், இன்று வரை தன் கிராமத்து நண்பர்கள், ஆரம்ப பள்ளி மற்றும் உயர் நிலை ...

சசிகலாவை பற்றி கேட்டால் எடப்பாடி எஸ்கேப்..! என்ன நடந்தது..? பன்னீர் முதலில் டெல்லி கிளம்ப, அடுத்த நாள் எடப்பாடி தன் சகாக்களுடன் விழுந்தடித்து பின் தொடர என டெல்லியில் இருவருமாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். 25 நிமிட சந்திப்பு இனிதாக இல்லை போலும்! வெளியில் வந்து நிருபர்களிடம் பேட்டியளித்த எடப்பாடியின் முகம் வெளிறி இருந்தது. குரலில் சொரத்தே இல்லை. ஏதோ தமிழ் நாட்டு நலன் தொடர்பாக விவாதித்தது போல ஏகப்பட்ட கற்பனை உரையாடல்களை சொன்னார். பக்கத்தில் இருந்த பன்னீர் செல்வத்தை பேசவே அனுமதிக்கவில்லை. சசிகலாவை ...