அதிமுக பொதுக் குழு தொடர்பாக நீதிமன்றங்கள் எத்தனை முறை தான் எப்படியெல்லாம் மாற்றி, மாற்றி நியாயம் பேசுவார்களோ..! இரண்டுங் கெட்டான் தலைமையில் அதிமுகவை கொண்டு நிறுத்துவதே பாஜகவின் நோக்கம்! அந்த நோக்கத்தை ஈடேற்றவே நீதித் துறையிலும் பெரும் நிர்பந்தம் செலுத்தப்பட்டதோ…? சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துவிட்டு அதை செல்லாமல் ஆக்கிய வழக்கில் இவ்வளவு மெனக்கிடல்கள் இல்லை. ஆனால், ”எங்க ஆளான ஒ.பன்னீர் செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தூக்க அனுமதிப்பதா?” என பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் கமுக்கமாக காய் நகர்த்தி வருகிறது. ...
எதிர்பார்க்கப்பட்டது தான்! கூடா நட்பு கேடாய் ஆனது. ஓடாய் தேய்ந்தது நிதிஸ் கட்சி! ஜனதா தளத்தின் அடையாளத்தையே அழித்து , பாஜக செய்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்னும் தொடர்ந்தால், ‘இருப்பதையும் இழப்போம்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் நிதீஸ். என்னவெல்லாம் நடந்தன பீகாரில்? உரிமையை இழந்தவராய், மெள்ள,மெள்ள ஒடுக்கப்பட்டவராய் பெயருக்கு முதல்வர் பதவி வகித்தார் நிதீஸ். பீகாரில் நடந்தவை என்ன? பாஜக நிதிஸூக்கு தந்த தொல்லைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். பாஜகவை விட்டு விலகி வந்த ஐக்கிய ஜனதா தளத்திற்கு ராஷ்டிரிய ...
தமிழக அரசும், காவல் துறையும், உளவுத் துறையும் இந்துத்துவ சக்திகளின் அரசியல் அஜந்தாக்களை நிறைவேற்றத் துணை போகிறதோ..? என திகைக்க வைக்கும் சம்பவங்கள்! திசை மாறுகிறதா திராவிட மாடல்? கள்ளக்குறிச்சி சம்பவம் தொடங்கி, பிரதமர் மோடி வருகை வரை ஒரு பார்வை! ”நடப்பது திராவிட மாடல் ஆட்சியாக்கும்” என்று அது குறித்த பெருமிதங்களையும், கற்பிதங்களையும் மேடைகளில் எழுத்துக்களில் தொடர்ந்து கட்டமைத்து வந்தது திமுக! ஆனால், நடைமுறையோ அதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் உள்ளது. ‘விட்டுக் கொடுத்து போவது’, ‘விரோதமில்லாமல் நடந்து கொள்வது’ என்றால், அதில் தவறு ...
க.செபாஷ்டின், வேலூர் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு என்பது சாதியரீதியிலானது. கவுண்டர்களுக்கும், முக்குலத்தோருக்கும் இடையிலான பிளவு என பிரபல பத்திரிகையாளர்கள் சிலர் கூறி வருகிறார்களே..? ஒ.பி.எஸ்சுக்கும், இ.பி.எஸ்சுக்கும் சாதிய அடையாளம் இருக்கிறது. சுய சாதி அபிமானமும் இருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும், இந்தப் பிளவுக்கும், சாதிக்கும் சம்பந்தமில்லை. முக்குலத்து சாதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், காமராஜ்… என ஏறத்தாழ அனைவருமே ஒ.பி.எஸ்சுக்கு எதிரான அணியில் தான் உள்ளனர். முக்குலத்து எம்.எல்.ஏவான ராஜன் செல்ப்பாவோ ஒ.பி.எஸ்சிடம் ”கட்சியில் ...
ஸ்டாலின் டெல்லி விசிட் பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வித்திட்டு கூட்டணிக் கட்சிகளையும், மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சந்தர்ப்பவாதம், சரண்டரின் தொடக்கம், காங்கிரசிடமிருந்து விலகல்.. ஆகிய விமர்சனங்கள் வேகம் எடுத்துள்ளன! நாம் இதை எப்படி புரிந்து கொள்வது? டெல்லியில் ஏற்கனவே தமிழக அரசின் விருந்தினர் மாளிகை உள்ளது. திமுகவிற்கு என்று பாராளுமன்ற வளாகத்திலேயே அலுவலகமும் உள்ளது. இந்த புதிய அலுவலகமானது காங்கிரஸ் காலத்திலேயே ஏழு எம்.பிக்களை பெற்றுள்ள எந்த ஒரு கட்சிக்கும் டெல்லியில் அலுவலகம் கட்டிக் கொள்ள அன்றைய மத்திய அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் தற்போது ...
நீண்ட, நெடிய போராட்டங்களுக்கு பிறகு, 250 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தினோம்! அதன் பிறகு காந்திய சீடர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியா, தற்போது கார்ப்பரேட் ஆதரவு அரசியல்வாதிகளால் மீண்டும் அடிமை அரசியலை நோக்கி சென்று கொண்டுள்ளது! அதற்கு தோதாக நசுக்கப்படுவதே மாநில உரிமைகள்! மாநிலங்களின் வரிவசூலிக்கும் உரிமைகளில் தலையிட்டு ஜி.எஸ்.டி எனக் கொண்டு வந்தார்கள்! மாநில வருவாயை அபகரித்துக் கொண்டு நம்மை மத்திய ஆட்சியாளர்களிடம் கையேந்த வைக்கிறார்கள்! மாநிலங்களின் வசமிருந்த கல்வி அதிகாரத்தை மத்திய அரசு கபளீகரம் செய்யும் முயற்சியே புதியகல்விக் கொள்கையும், நீட் தேர்வு ...
பிரதமர் மோடி திடீரென்று கல்வியாளர் அவதாரம் எடுத்து மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். அதை இந்தியா முழுமையும் உள்ள மாணவர்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம்! ஆனால், மாணவர்களை இயல்பாக கேள்வி கேட்க விடுகிறார்களா? கேட்டால் என்னவாகும்..? பத்திரிக்கையாளர்களை பிரதமர் மோடி கடந்த ஏழு ஆண்டுகளில் ஒருமுறை கூட சந்தித்ததோ, பொதுமக்கள் சார்பான கேள்விகளுக்கு பதிலளித்ததோ இல்லை! அப்படிப்பட்ட பிரதமர் மாணவர்களுடன் ‘பரீக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் (தேர்வு பற்றி ஓர் விவாதம்) 2018 முதல் ஆண்டுதோறும் ஒரு ‘கலந்துரையாடலை’ நிகழ்த்துகிறார். குறிப்பாக ...
எம்.கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம் , சென்னை ஒரே ஆண்டில் 157 கோடி தடுப்பூசி போட்டுவிட்டதாக ஒன்றிய அரசு பீத்திக் கொள்வதை கவனித்தீர்களா…? முதன் முதலாக ரசாயன உரங்களையும், வீரிய விதைகளையும் அறிமுகப்படுத்திய போது, இதே போல ஒரே ஆண்டில் …செய்த சாதனையின் தொடர்ச்சி தான் இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை மலடாக்கிவிட்டது. நாட்டு மக்களை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது. தற்போது நாட்டு மாட்டுக்கு வெளி நாட்டு ஜெர்ஸியோட சினையை ஊசியில செலுத்தி, கம்பீரமான மாடுகளை ஒழித்து பதிலாக கலப்பின மாடுகளை உருவாக்குவது போல நம்முடைய இயற்கையான ...
மோடி என்றாலே பற்றி எரிகிறது பஞ்சாப்! கொந்தளிக்கும் விவசாயிகள்! குழந்தைகள் முதல் முதியோர் வரை குமுறும் பஞ்சாபிகள்! எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் சென்றார் பஞ்சாப்? தற்போது எதற்கிந்த மிரட்டல்கள்! இது எந்த சதித் திட்டத்திற்கான ஒத்திகை..? பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தை தொடரமுடியாமல் திரும்பி வந்ததை ஒட்டி நேற்று ஏற்பட்ட சர்ச்சையில் ஏற்படும் கூச்சலும், கூப்பாடும், ஆத்திரமூட்டும் மிரட்டல்களும் ஆச்சரியமூட்டுகின்றன! கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் மோடி அரசின் பல்வேறு அடக்குமுறைகள்,கேலி பேச்சுக்கள், ஏமாற்றல்களைத் தாண்டி வெற்றி ...
மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை, விருதுநகர் மாவட்டம் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? ஒரு ஆண் எத்தனை பெண்ணோடு தொடர்பு கொண்டவனாகத் தான் இருந்தாலும், தனக்கான மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பான்! அதே போல கருணாநிதி எப்படிப்பட்ட ஊழல் செய்யும் தலைவர் என்பதை அருகிருந்து அணுவணுவாக உணர்ந்த போதிலும் தன்னை பொருத்தவரை ஒரு நேர்மையாளராக நிலை நிறுத்திக் கொண்டவர் சண்முகநாதன்! கருணாநிதியின் சாதனைகள் பலவற்றுக்கு அவரது மனைவி, மக்கள், சகாக்களை விட அதிக உறுதுணையாக இருந்த ஒரே நபர் ...