கொலைக் குற்றத்திற்கு ஆளாகியுள்ள கடலூர் திமுக எம்.பி, டி.ஆர்.வி.ரமேஷ், கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு ஆளான நெல்லை எம்.பி.ஞானதிரவியம் ஆகிய இருவர் மீதான நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளப்படும் என்பதைப் பொறுத்து தான் ஆளும் கட்சி மீதான மக்கள் மதிப்பீடு உருவாகும்! கட்சிக்காரர்களின் அராஜகச் செயலுக்கு அரசு ஆதரவளிக்காது என்பதை உத்திரவாதப்படுத்துவாரா..? தமிழ்நாடு அமைதி பூங்கா என்று அடிக்கடி சொல்லப்படுகிறது.ஒரு நாடு அமைதி பூங்காவாக தொடர்வது என்பது, ஆட்சியில் உள்ள கட்சியானது அதிகாரத்தை எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பொறுத்து தான் உள்ளது! எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை ...