சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் நம்பமுடியாத விசித்திரமாக உள்ளன! இன்றைய தினம் ஒ.பி.எஸ் எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்விலும் திமுக அரசின் ஒத்துழைப்பு கிடைத்ததை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை! அதிமுகவின் சென்ற பொதுக் குழுவின் போது இரவோடு இரவாக நீதிமன்றக் கதவுகளை திறக்க வைத்து விடிய,விடிய விசாரிக்கப்பட்டு, அதிகாலை நாலரை மணிக்கு ஒ.பி.எஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததில் திமுக தலைமை காட்டிய அக்கறை உண்மையிலேயே பத்திரிகையாளர்களுக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. ஒ.பி.எஸ்சுக்கு பின்னணியில் பாஜக இருப்பதை புரிந்து கொள்ள முடியும்! ...

எந்த ஒரு எம்.பியானாலும், மக்கள் நலத் திட்டங்களை மாநிலஅரசின் ஒத்துழைப்புடன் தான் செய்ய முடியும்! மாநில அரசு என்றால், மாவட்ட ஆட்சியர் வழியாகத்தான் மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்க்க முடியும்! ஜோதிமணி அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படும் ஒரு சமூக செயல்பாட்டாளர்! கரூர் எம்.பி தொகுதியில் சுமார் 10,000 மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உபகரணங்களை கேட்டு காத்துள்ளனர். இந்த நிலையில் மாநில அரசால் மட்டுமே இந்த தேவைகளை நிறைவு செய்துவிட முடியாது! ஆகவே, அவர் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் ...