”இந்துக்கள் என்றால்,இளக்காரமா..? பாதிரியார்கள் நடத்தும் பள்ளியில் குற்றமே நடக்கவில்லையா..?’’ ”பிராமணர்கள் நடத்தும் பள்ளி என்பதால் தாக்கலாமா..? பள்ளியில் சீட்டு கேட்டு கிடைக்காதவர்கள் கிளப்பும் புரளி தான் இது..?’’ ”கொரோனா பிரச்சினையை மறைக்க திமுக இந்த விவகாரத்தை ஒரு கருவியாக்கிக் கொள்கிறது.’’. ”அந்த பள்ளிக் கூடத்தை ஆட்டையப் போட திமுகவினர் முயற்சிக்கிறார்கள்!’’ ‘’முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரும் இதில் இழுக்கப்படுவதால் களங்கம் ஏற்படும் முன்பு இதில் முதல்வர் தலையிட வேண்டும்!’’ ”அந்த வாத்தியார் பற்றி யாரும் இது வரை புகார் ...

தனியார் பள்ளிகள் என்பவை மிகப் பெரிய கேள்விக்கு அப்பாற்ப்பட்ட அதிகாரமையங்களானதில் தொடங்குகிறது இந்த மாதிரியான பிரச்சினைகளின் மூலம்! பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் (59) இப்போது தான் வெளியில் தெரிய வந்து மாட்டியுள்ளார். பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை தந்த இது போன்ற சம்பவங்களின் பின்னணி என்ன..? ஆக, இந்த முதிய வயசிலேயே – தன் மகளாகவோ, பேத்தியாகவோ கருத வேண்டிய பெண் குழந்தைகளிடம் இந்த ஆட்டம் போட்டிருக்கிறார் என்றால், இத்தனை ஆண்டுகளில் என்னென்னவெள்ளாம் செய்திருப்பார் ராஜகோபாலன்? எத்தனை குழந்தைகள் அதற்கு பலியாகி சொல்ல ...