பாண்டிச்சேரியில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததால் என்.ஆர்.காங்கிரஸ் எக்கச்சக்க இக்கட்டுகளில் சிக்கித் தவிக்கிறது! இன்னும் மந்திரி சபை அமைக்க முடியவில்லை. கொரோனாவில் செத்து பிழைத்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற எந்த சீரான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியவில்லை. ஆட்சியில் பங்கு கொடுத்தால் காலப் போக்கில் நம்மை காலி பண்ணிவிடுவார்களோ என பாஜகவைக் கண்டு பயந்த ரங்கசாமி மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார்! இது தான் வாய்ப்பு என்று மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமித்துக் கொண்டு, சுயேட்சை எம்.எல்.ஏக்களை வலை வீசி விலை பேசிக் கொண்டுள்ளது பாஜக. இதற்கு ...