அரசாங்க சொத்துக்களையெல்லாம் தங்கள் ஆத்மார்த்த நண்பர்களுக்கு அள்ளி எடுத்து தந்து கொண்டுள்ளது பாஜக அரசு. தேசீய பணமாக்கல் திட்டத்தின் மூலம் ரூ.6 லட்சம் கோடி பணம் -பொது சொத்துக்களை தனியாரிடம் குத்தகைக்கு கொடுப்பதன் மூலம்-திரட்டப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததற்கு எதிராக இன்று தமிழக சட்ட சபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒன்றிய அரசின் சமூக விரோத செயல்பாடுகளை யார் தடுப்பது,எப்படி எதிர்ப்பது என இந்தியாவே திகைத்து நிற்கையில். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ...