நான்கே நாட்களில் நச்சென்று நடந்து முடிந்துவிட்டது, சட்டமன்ற கூட்டத் தொடர்! மிக முக்கியமான அடிப்படை வித்தியாசம் ஒன்றை இந்தக் கூட்டத் தொடர் முழுக்க காண முடிந்தது! அது எதிர்கட்சியினருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது! குறுக்கீடுகள் இல்லாமல் அவர்கள் குறைகளை சொல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த ஆட்சி எந்த திசையில் பயணிக்க உள்ளது என்பது கிட்டதட்ட தெளிவாகிவிட்டது..! இந்த நாகாரீகமான அணுகுமுறைய ஜெயலலிதா மற்றும் எடப்பாடி முதல்வராக இருக்கும் போது பார்க்க முடியவில்லை. எதிர்கட்சியின்ருக்கு போதுமான நேரம் தரமறுப்பது, அவர்களை பேசவிடாமல் குறுக்கீடு செய்வது, கருணாநிதியை தாக்கிப் ...