சுதந்திர தின சூழலில் பல எண்ண ஓட்டங்கள் மின்னலாய் தோன்றுகின்றன.கடந்து வந்த பாதையும், எதிர்கொண்ட சோதனைகளும் நம்கண்முன் விரிகின்றன. காலனி ஆதிக்கத்தை வீழ்த்தி விடுதலை பெற்ற நாடுகளில் இந்தியா ஒரு தனித்தன்மையுடன் திகழ்ந்தது. எண்ணற்ற கனவுகளுடன், நமது விதியை நாமே முடிவு செய்யும் அதிகாரத்தை பெற்ற நாம் , நமது விடுதலை இயக்கத்தின் குறிக்கோள்களை அடைய செம்மையான ஒரு முறைமையை ஏற்படுத்தவும் சூளுரைத்தோம். அதில் பெருமளவு வெற்றியும் கண்டோம். காந்தி, நேரு, பட்டேல், நேத்தாஜி, அபுல் கலாம் ஆசாத் மற்றும் அம்பேத்கர் போன்ற மாபெரும் ஆளுமைகள் ...