பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கியே தீருவது என்பதில் படிப்படியாக முன்னேறி வருகிறது பாஜக அரசு. அரசுத்துறை வங்கிகளை அணுவணுவாக பலவீனப்படுத்தி, தனியார் வங்கிகளை மட்டுமே தழைத்தோங்கச் செய்வதே அரசின் திட்டமாக அரங்கேறி வருகிறது! சமீபத்தில் கூட ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்ற நிலையில், அவ்வங்கி தனியார் மயமாக்கப்பட்டது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கை குறைப்பதற்கான சட்டதிட்டங்களை அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இதை எதிர்த்து தான் இந்தியா முழுமையும் வங்கி ஊழியர்கள் ...

விவரிக்க முடியாத அதிர்ச்சி,கொந்தளிப்பு. போராட்டங்கள் என ஆந்திரா அல்லோலகலப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறையான விசாகப்பட்டிணம் ஸ்டீல் உற்பத்தி ஆலையை – 36,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், 40,000 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளிக்கும் வி.எஸ்.பியை பாதுகாத்தே தீருவது என்று ஆந்திரா போர்க்கோலம் பூண்டுள்ளது! வைசாக் ஸ்டீல் ஆலை 1970 ல் இந்திராகாந்தியால் திட்டமிடப்பட்டு நீண்ட நெடிய அடித்தள வேலைகள், தியாகங்களுக்கு பிறகு உருவாக்கப்பட்டதாகும். இதற்கு அன்றைய சோவியத் ரஷ்யா பேருதவி செய்தது! இது மட்டுமின்றி உள்ளூர் மக்கள் பலர் தங்கள் நிலத்தை தானமாக ...

இது நாள் வரையில்லாத அளவுக்கு புதுப்புது நெருக்கடிகளைத் தனது வாடிக்கையாளர்கள் மீது திணிப்பதன் மூலம் எல்.ஐ.சி.யின் வாடிக்கையாளர்களான ஏழை,எளிய மக்களின் பல லட்சம் பாலிசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது! கடந்த மார்ச் 24 ந்தேதி  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அது முழுமையாக விலக்கிக்  கொள்ளப் படவில்லை. தொழில் ,பணி என்று சகலமும் தொய்வடைந்து மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர். குறிப்பாக ,கீழ்த்தட்டு, நடுத்தர பொருளாதாரப் பிரிவில் வாழும் மக்கள் வயிற்றை  வாயைக்கட்டி வாழ்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் இணுக்கி இணுக்கி செலவழிக்கிறார்கள். வீட்டுக் கடன்,  வாகனக் கடன்,  இ .எம். ஐ. செலுத்த கால நீட்டிப்பு ...