உத்திரப் பிரதேசத் தேர்தல் உக்கிரமடைந்து கொண்டுள்ளது. மீண்டும் பாஜக ஆட்சி வருவதற்குத் தான் வாய்ப்பு உள்ளது என பல ஊடகங்களும் சொல்லி வந்தன. ஆனால், தற்போதோ, பாஜக கூடாரமே காலியாகி, பலத்த பின்னடைவை கண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. உத்திரபிரதேச அரசியல்; சுதந்திரமடைந்து முதல் 40 ஆண்டுகள் காங்கிரசின் கோட்டையாகத்  திகழ்ந்தது உத்திரபிரதேசம். 1990 களுக்கு பிறகு உ.பி மாநிலக் கட்சிகளின் கோட்டையானது. சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகியவை மட்டுமே பலம் பொருந்திய கட்சிகளாக இருந்தன. ஆனால், 2014 முதல் பாஜக தலைதூக்க ஆரம்பித்தது. ...

ப.வ.தமிழரசன், சூலூர், கோயம்புத்தூர் ஒரு தலைசிறந்த பத்திரிக்கையளாராக வர என்ன செய்ய வேண்டும்? மானுட நேசமும், அறச் சீற்றமும், உண்மையைக் கண்டறியும் வரை சலிப்பில்லாத ஆர்வமும் கொண்டிருக்க வேண்டும். கே.எஸ்.கவின், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஶ்ரீபெரும்புதூர் தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பட மத்திய அரசு அனுமதித்திருந்தால் இந்த நூறுகோடி இலக்கை விரைவில் எட்டி இருக்கலாம்தானே? இந்த நூறு கோடி இலக்கை யாருக்கு சாதகமாக எட்ட நிர்ணயித்தார்களோ.., அதன்படி மட்டுமே செயல்படுவார்கள்! கே.ராஜாராம், முகையூர், விழுப்புரம் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதே..?ஆனால், திருவிழாக்கள், அரசியல் ...

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக எத்தனை விவசாயிகளையும் காவு கொடுக்கத் தயார் என வரலாறு காணாத வகையில் இந்தியாவில் காட்டாட்சி நடத்தி வரும் மத்திய பாஜக அரசின் அமைச்சர் அஜய்மிஸ்ரா சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் போராட்டத்தை இரண்டே நிமிடத்தில் முடித்து வைக்க என்னால் முடியும்’’ என்று பேசி இருந்தார்! அதைதான் அவர் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது வன்முறை நிகழ்த்தி பயமுறுத்தி பார்க்க முயன்றுள்ளார்! ஜனநாயகத்தில் கருப்பு கொடி காட்டுவது என்பது அமைதியான வகையில் எதிர்ப்பை தெரிவிக்க செய்யும் ...

கடையெழு வள்ளல் எழுவர், கன்னிகா ஸ்திரி கடவுளர் எழுவர் என்பது போல தமிழ் சமூகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ராஜிவ் காந்தி கொலை சம்பந்தப்பட்ட கைதிகள் எழுவர் விவகாரம் விவாதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. திறந்த மனதுடன் – முன் கூட்டிய அனுமானங்கள் எதுவுமின்றி – இந்த விவகாரத்தை நாம் பார்ப்போம்! தமிழக வரலாற்றோடு மட்டுமல்ல, இந்திய வரலாற்றோடுப் பிண்ணிப் பிணைந்துள்ள இந்த விவகாரத்தில் என்னையுமறியாமல் நானும் சம்பந்தப்பட்டுள்ளேன்! என்னை பின் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இவை ஓரளவு தெரியும்! ராஜிவ்காந்தியின் ஒவ்வொரு தமிழக வருகையின் போதும் ...