தமிழகத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நெல்கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பின்றி அழிவது வாடிக்கையாகவுள்ளது! காவிரிப் பாசன மாவட்டங்களிலும், வட மாவட்டங்களின் சில இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களில் நெல் கொள்முதல் எந்தவித காரணமும் இல்லாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளோடு தயாராக காத்துக் கொண்டிருக்கும் நிலையில்,  நெல்கொள்முதல் நிறுத்தப்பட்டதை அடுத்து நெல் மூட்டைகள் மழையில் வீணாவதைக் கண்டு மனம் பதறுகிறது! இடப்பற்றாகுறை காரணமாகவே  நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தினசரி ...