பசுமை வயல்வெளிகள் பூத்துக் குலுங்கும் கிராமங்கள்! நாற்று நடும் பெண்கள், மாடு பூட்டி ஏர் உழும் உழவன், ஏரிகள், குளம், குட்டைகள். ஆடு, மாடு, கோழிகள் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் தெருக்கள், கண்ணாம் பூச்சி, சடுகுடு விளையாடும் சிறுவர்கள்..இன்னும் எத்தனை நாள் இந்த அமைதியான வாழ்க்கை அனுமதிக்கப்படுமோ..? எப்போது புல்டோசர்களின் அணிவகுப்பு நடக்குமோ..அப்படி ஒரு சம்பவம் நடந்தால்.., அதற்கு பிறகு நம் வாழ்க்கை என்னாகுமோ..? இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் கிராமம்! பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் ...
13 பேர் கொல்லப்பட்ட தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை மே 18 ந்தேதி முதல்வரிடம் தரப்பட்டது. இந்த மூன்று மாதங்களாக அதை வெளியிடாமல் தாமதப்படுத்தியது ஏன்? இந்த அத்துமீறலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்? ”இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம்” என்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொன்னார் ஸ்டாலின். ஆனால், தற்போது மூன்று மாதங்களாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றி மூச்சு கூட விடாமல் மறைத்து உள்ளார் என்பது ...
கள்ளக்குறிச்சி மரணத்தை தமிழக காவல்துறை கையாண்ட விதமும், அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தை அணுகும் விதமும் தமிழ் நாட்டின் காவல் துறையை வழி நடத்துவது தமிழக முதலமைச்சரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைமையா? என்ற சந்தேகம் வலுக்கிறது. மைக்கேல்பட்டி மாணவி மரணத்தில் தமிழக பாஜக நேரடியாக களம் கண்டது! ஆனால், இதில் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து சதித் திட்டம் தீட்டி செயல்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை சுலபத்தில் அலட்சியபடுத்த முடியாது. உண்மையில் இந்தக் கலவரம் மக்களின் தன் எழுச்சியால் தான் உருவானது. அந்த பள்ளி நிர்வாகம் கடந்த ...
இத்தனை நாட்களாகியும் ஒரு மாபெரும் அநீதிக்கு எதிராக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய் திறக்காமல் காட்டும் மெளனம், நுபூர் சர்மா கைது செய்யப்படாமல் இருப்பது, அதனால் நாடெங்கும் நடக்கும் போராட்டங்கள், வன்முறைகள்..அதை சாக்காக வைத்து இஸ்லாமியர்களை அடக்கத் துடிப்பது…! இஸ்லாமியர்களை அவதூறு செய்வதே வேலையாகக் கொண்டிருந்த நுபூர் சர்மாவிற்கு பாஜக செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்தது மட்டுமின்றி, அவர் அவ்வாறு பேசும் போதெல்லாம் ஊக்குவித்து உற்சாகப்படுத்தியவர்கள் தான் மோடியும், அமித்ஷாவும்! அதனால் தான் ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக கட்சியில் இருந்து ...
தடுப்பூசியின் பயனின்மை மற்றும் பாதக விளைவுகளால் ஆட்சியாளர்களும், கார்ப்பரேட் ஊடகங்களும் கட்டமைத்த மாயைகள் தகர்ந்து வருகின்றன! அதனால், ”இதை விரும்பாதவர் களுக்கு திணிக்காதே, அறிவியலின் பெயரால் அராஜகத்தை அரங்கேற்றாதே..”என மருத்துவர்களே கூட்டாக களம் காண உள்ளனர்! ” விரும்பாதோருக்கு தடுப்பூசியை திணிக்காதே” ”மக்களை சோதனை எலிகளாக்காதே” ”என் உடம்பு, என் உரிமை,” ”அச்சத்தை விதைக்காதே, அறிவியலை மக்களுக்கு எதிராக மாற்றாதே” என்ற கோஷங்கள் உலகம் முழுமையும் வலுப்பெற்று வருகின்றன! கனடாவில் பாராளுமன்றத்தையே முற்றுகையிட்டும், முக்கிய சாலைகளை தடுத்தும் மக்கள் நடத்தும் போராட்டம் 50 ஆண்டுகளில் ...
மோடி என்றாலே பற்றி எரிகிறது பஞ்சாப்! கொந்தளிக்கும் விவசாயிகள்! குழந்தைகள் முதல் முதியோர் வரை குமுறும் பஞ்சாபிகள்! எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் சென்றார் பஞ்சாப்? தற்போது எதற்கிந்த மிரட்டல்கள்! இது எந்த சதித் திட்டத்திற்கான ஒத்திகை..? பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தை தொடரமுடியாமல் திரும்பி வந்ததை ஒட்டி நேற்று ஏற்பட்ட சர்ச்சையில் ஏற்படும் கூச்சலும், கூப்பாடும், ஆத்திரமூட்டும் மிரட்டல்களும் ஆச்சரியமூட்டுகின்றன! கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் மோடி அரசின் பல்வேறு அடக்குமுறைகள்,கேலி பேச்சுக்கள், ஏமாற்றல்களைத் தாண்டி வெற்றி ...
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர், அமைச்சர்கள், சட்டங்கள்.. ஆகிய எதுவும், யாரும் நெருங்க முடியாத சர்வ அதிகாரத்துடன் வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. தொழிலாளர்கள், அவர்களுக்கு பழுதடைந்தால் வீசி எறிந்து விடத்தக்க நடமாடும் இயந்திரங்களே..! தொழில் தொடங்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து தந்து வெளி நாட்டு நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் வழங்கி, அந்த நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் உள்ளிட்ட பலவும் செய்து தந்து ஊக்குவிக்கின்றன மத்திய மாநில அரசாங்கங்கள்! ஆனால், இப்படி தங்களுக்கு தரப்பட்ட சலுகைகளைக் கொண்டு நம் நாட்டிற்குள்ளேயே ஒரு ...
வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதை, உள்ளூர் அளவிலும்,உலக அளவிலும் அது ஏற்படுத்திய அதிர்வுகள், தாக்கங்கள்! மோடியின் அதிரடி வாபஸ் அறிவிப்பு நம்ப வைத்து கழுத்தறுக்கும் தந்திரமா..? ஆகிய சந்தேகங்கள் பற்றியெல்லாம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் நேர்காணல். தமிழ்நாட்டில், 60 க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து, ‘ஐக்கிய விவசாயிகள் முன்னணி’ என்ற அமைப்பு உருவாகியுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக, கடந்த ஓராண்டு காலமாக போராட்டத்தை வழிநடத்தி வருபவர் கே.பாலகிருஷ்ணன். பிரதமரின் திடீர் அறிவிப்புக்கான காரணம், ...
ஜூலை 26ஆம் தேதியுடன் ஏழு மாதங்களை நிறைவு செய்கிறது, மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் கோரியும்,டெல்லி நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம்! யாருக்கும் தெரியாமல் ஊரடங்கிய நேரத்தில் 2020 ஜூன் 6ஆம் தேதி, மூன்று அவசரச் சட்டங்களாகப் கொண்டுவரப்பட்டு,செப்டம்பர் 3வது வாரத்தில்,அனைத்து சனநாயக விதிகளையும், மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, நாடாளுமன்றத்தில் சட்டங்களாக இவை நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவசர அவசரமாக கொண்டுவருவதால் பெரியளவிற்கு எதிர்ப்பு இருக்காது,அப்படியே இருந்தாலும் சமாளித்து விடலாம்’ என்ற மூடநம்பிக்கையில் ஒன்றிய அரசு,முன் யோசனையில்லாமல் ...
வேலை, தொழில், வியாபாரம், வாழ்வாதாரம், ஓராண்டு கால கல்வி என அனைத்தும் பறிபோனது… சென்ற ஆண்டு நீடிக்கப்பட்ட நீண்ட ஊரடங்கால்! அந்த இழப்புகளில் விழுந்த பலர் இன்னும் எழுமுடியவில்லை. மற்றும் சிலர் தற்பொழுது தான் புது வாழ்வை துவக்கி உள்ளனர். தற்பொழுது மீண்டும் ஊரடங்கு வரலாமாம்! மீண்டும் கட்டுபாடுகளாம். மீறியவர்களுக்கு அபராதம், தண்டனைகளாம்…! கொரானாவைக் காட்டிலும் கொடுமையான இந்த அராஜகங்களை மீண்டும் கொண்டு வருவீர்களா..? மீண்டும் ஊரடங்கிற்கு எதிரான போராட்டங்கள் வட இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமையும் வீறுகொண்டு எழுந்துள்ளது…! 16.3.2021 முதல் இது ...