வேறு எதற்காகவும் ஆட்சி செய்ய வரவில்லை! ” இந்து மதத்தை வளர்க்கவும், மாற்று மதத்தவரை அச்சுறுத்தவுமே என் ஆட்சி’’ என தன் ஒவ்வொரு அசைவிலும் நிருபித்து வருகிறார் யோகி ஆதித்தியநாத்! பெயரில் தான் யோகி, ஆள் படுமுரட்டு சுபாவம்! இந்து மதத்தை அரசாங்கமே வளர்க்கும், போஷிக்கும் என்று களம் கண்டால், அதில், போலி ஆன்மீவாதிகளும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போட்டு ஊரை ஏய்க்கும் சாமியார்களுமே அதிகம் பயனடைவார்கள் என்பதற்கு உத்திரபிரதேசமே நல்ல உதாரணமாகும்! ஏனென்றால், உண்மையான ஆன்மீகவாதிகள் அதிகாரவர்க்கத்தை தேடிச் செல்லமாட்டார்கள்! எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள்! ...